பிஎட் ஆசிரியர் கல்வியியில் பட்டபடிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு
பிஎட் ஆசிரியர் கல்வியில் பட்டபடிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கி 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள 21 இடங்களில் உள்ள கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு இந்த கலந்தாய்வு நடைபெறவுள்ளது. சென்னை மதுரை கோவை சேலம் உள்ளிட்ட 4 இடங்களில் இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. மேற்கண்ட தகவலை தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைகழக துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.எட். முடித்த மாணவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுத முடியுமா?
சட்டசபையில் கேள்விநேரத்தின்போது, உறுப்பினர் பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.எட். எம்.எட். முடித்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதுவதற்கு அரசு ஆவணம் செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பதில் அளித்து, கூறியதாவது:
அத்தகைய பிரிவு மாணவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவது குறித்து முதல் அமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். இனிவரும் காலங்களில் பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது குறித்தும் முதல் அமைச்சரின் பார்வைக்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Comments (Atom)
home