தமிழகத்தைச் சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு, தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு செப்., 5ம் தேதி, டில்லி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருது வழங்க உள்ளார்.

 தமிழகத்தைச் சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு, தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு செப்., 5ம் தேதி, டில்லி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருது வழங்க உள்ளார்.
சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாநில அரசுகளும், தேசிய அளவில், மத்திய அரசும், ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவிக்கின்றன.
ஆசிரியராக வாழ்க்கையை துவக்கி, ஜனாதிபதியாக உயர்ந்த, ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து, தேசிய விருதுக்கு 22 ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஆரம்ப, நடுநிலைப் பள்ளி அளவில், 15 ஆசிரியரும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி அளவில், ஏழு ஆசிரியரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் மட்டும் இல்லாமல், அனைத்து மாநிலங்களிலும் இருந்தும், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு, செப்., 5ம் தேதி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி விருது வழங்க உள்ளார்.
விருதில், ரொக்கம் 25 ஆயிரம் ரூபாய், வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு மடல் ஆகியவை அடங்கும். விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் விவரம்:
1. ஆரோக்கியமேரி, தலைமை ஆசிரியை, செயின்ட் ஆன்ஸ் ஆரம்ப பள்ளி, ராயபுரம், சென்னை.
2. சம்பங்கி, தலைமை ஆசிரியை, அரசு நடுநிலைப்பள்ளி, கந்தனேரி, வேலூர் மாவட்டம்.
3. கந்தசாமி, தலைமை ஆசிரியர், அரசு நடுநிலைப்பள்ளி, கடப்பை, விழுப்புரம் மாவட்டம்.
4. செல்வராஜு, பட்டதாரி ஆசிரியர், ஆனந்தராஜு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி, மரைங்கநாயநல்லூர், நாகை மாவட்டம்.
5. நடராஜன், தலைமை ஆசிரியர், ஆதிதிராவிடர் நலத்துறை ஆரம்ப பள்ளி, சிக்கல்நாயக்கன்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.
6. ஆண்டிரூவ்ஸ், தலைமை ஆசிரியர், சி.எஸ்.ஐ., ஆரம்ப பள்ளி, உறையூர், திருச்சி மாவட்டம்.
7. தெரேன்ஸ், தலைமை ஆசிரியர், ஆர்.சி., அமலாராக்கினி நடுநிலைப்பள்ளி, குளித்தலை, கரூர் மாவட்டம்.
8. நளினி, தலைமை ஆசிரியை, அரசு நடுநிலைப்பள்ளி, தாரவைதோப்பு, பாம்பன், ராமநாதபுரம் மாவட்டம்.
9. முத்தையா, தலைமை ஆசிரியர், அரசு நடுநிலைப்பள்ளி, கே.செம்பட்டி, மதுரை மாவட்டம்.
10. உதயகுமார், தலைமை ஆசிரியர், அரசு ஆரம்ப பள்ளி, சின்னகொண்டாலம்பட்டி, சேலம் மாவட்டம்.
11. நசிருதீன், தலைமை ஆசிரியர், நகராட்சி உருது மகளிர் நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம்.
12. ராமகிருஷ்ணன், அரசு ஆரம்ப பள்ளி, வெள்ளாளபாளையம், கோவை மாவட்டம்.
13. தாமஸ், தலைமை ஆசிரியர், பாரத் மாதா உதவிபெறும் ஆரம்ப பள்ளி, உப்பாட்டி, நீலகிரி மாவட்டம்.
14. விநாயக சுந்தரி, தலைமை ஆசிரியை, சங்கரகுமார் ஆரம்ப பள்ளி, சங்கரலிங்கபுரம், கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்.
15. ராமசாமி, தலைமை ஆசிரியர், வேணுகோபால விலாச உதவிபெறும் ஆரம்ப பள்ளி, விஸ்நாம்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.
16. நீலகண்டன், தலைமை ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுபேட்டை, வேலூர் மாவட்டம்.
17. சாஷி ஸ்வரண்சிங், முதுகலை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம், சென்னை.
18. கஸ்தூரி, தலைமை ஆசிரியர், நகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஜமீன் பல்லாவரம், காஞ்சிபுரம் மாவட்டம்.
19. ஆதியப்பன், தலைமை ஆசிரியர், எம்.எப்.எஸ்.டி., மேல்நிலைப்பள்ளி, சவுகார்பேட்டை, சென்னை.
20. செல்வசேகரன், முதுகலை ஆசிரியர், கிரசன்ட் மேல்நிலைப்பள்ளி, அவனியாபுரம், தஞ்சாவூர் மாவட்டம்.
21. கஸ்தூரி, பட்டதாரி ஆசிரியர், மார்னிங் ஸ்டார் உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி, செங்குந்தபுரம், கரூர் மாவட்டம்.
22. பாலுசாமி, தலைமை ஆசிரியர், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, பீளமேடு, கோவை மாவட்டம்.

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டுத் தேர்வு அட்டவணையை, பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ளார்.

 பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டுத் தேர்வு அட்டவணையை, பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ளார்.மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத்தேர்வை, மாணவர்கள், பயம் இல்லாமல் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக, பொதுத்தேர்வில் கடைபிடிக்கும் முறையைப் போலவே, காலாண்டு, அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது.அதன்படி, "10ம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு, செப்., 17ம் தேதி துவங்கி 26ம் தேதி வரை நடைபெறுகிறது.அதைப்போல, பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு செப்., 15ம் தேதி துவங்கி 26ம் தேதி வரை நடைபெறுகிறது" என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரி தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதால், குறைந்த கட்டணத்தில் நிறைந்த கல்வி அளிக்கும் அரசு கல்லூரிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரி தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதால், குறைந்த கட்டணத்தில் நிறைந்த கல்வி அளிக்கும் அரசு கல்லூரிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரம், இந்த சட்டம் குறித்த சில சந்தேகங்களும் முன்வைக்கப்படுகின்றன.தமிழகத்தில், தற்போது ஏழு அரசு சட்டக் கல்லூரிகளும், சேலத்தில் ஒரே ஒரு தனியார் சட்டக் கல்லூரியும் இயங்கி வருகின்றன. இதுதவிர, அம்பேத்கர் சட்டப் பல்கலையில் சிறப்பு சட்டப்பள்ளியும், ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டப்பள்ளியும் இயங்கி வருகின்றன.ஆண்டுதோறும், இவற்றில் 1,492 பேர், பி.ஏ.பி.எல்., பி.ஏ.பி.எல்., ஹானர்ஸ் பி.காம். பி.எல்., ஆகிய படிப்புகளில் கலந்தாய்வு மூலம் சேர்க்கப்படுகின்றனர். இதுதவிர, மூன்றாண்டு பி.எல்., படிப்பிலும் மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு வாயிலாக நடக்கிறது.இந்த நடைமுறை, அரசு கல்லூரியில் மட்டுமே. சேலத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் அரசு சார்பிலான சேர்க்கை நடப்பதில்லை.இவை தவிர, சென்னையில் எஸ்.ஆர்.எம்., சவீதா வேலூர், வி.ஐ.டி., தஞ்சை சாஸ்த்ரா ஆகிய நிகர்நிலை பல்கலைகளிலும், சட்ட பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.அரசு மற்றும் தனியார், நிகர்நிலை பல்கலை என அனைத்து கல்வி நிறுவனங்களுமே, அகில இந்திய பார் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்றே இந்த கல்வி நிறுவனங்களை நடத்துகின்றன.இவற்றில், மாணவர் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில், புதிய தனியார் சட்டக் கல்லூரிகள் துவக்கப்படுவதை தடுக்க, சமீபத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.அந்த சட்டத்தில், குறைந்த செலவில், தரமான சட்டக் கல்வியை வழங்குவதற்கு, படிப்படியாக, அரசு சட்டக் கல்லூரிகளை நிறுவுவதற்கு கொள்கை முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக நலிவுற்ற பிரிவினருக்கு, தனியாரால், தரமான சட்டக் கல்வியை அளிக்க முடியாதது, தனியாரால் திறம்படத் தொடர்ந்து நிர்வாகம் செய்ய முடியததாலும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது.அதே நேரத்தில், இந்த சட்டம், யு.ஜி.சி., அங்கீகாரத்தை பெற்று இயங்கும் நிகர்நிலை பல்கலைகளுக்கு பொருந்தாது என, கூறப்படுகிறது.நிகர்நிலை பல்கலைகளில், சட்டக்கல்வி குறித்து, எஸ்.ஆர்.எம்., பல்கலை வேந்தர் பச்சமுத்து கூறியதாவது: தமிழகத்தில், சட்டக் கல்லூரிகளை தனியார் நடத்த அனுமதியில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கக்கூடியது. தனியார், சட்டக் கல்லூரிகளை நடத்தும்போது, அதன் கல்வித்தரம் எந்தளவுக்கு இருக்கும் என்பதை சொல்ல முடியாது.அதோடு, கல்விக் கட்டணமும் கூடுதலாக இருக்கும் என்பதாலும், தமிழக அரசு, அதற்கு அனுமதி மறுத்துள்ளது. ஆனால், எங்களைப் போன்ற தனியார் பல்கலைகள், சட்ட படிப்புகளை தொடங்க, பார் கவுன்சில் ஆப் இந்தியா முறைப்படி அனுமதி வழங்கி இருக்கிறது. அது வகுத்துத் தந்திருக்கும் அடிப்படையில்தான், பாட திட்டங்கள் இருக்கும். தமிழக அரசின் சட்ட பாடத் திட்டங்களை விட, கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும்.கட்டணமும், பார் கவுன்சில் அறிவுறுத்தி இருப்பது போல்தான் வசூலிக்கப்படுகிறது. அதனால், தனியார் பல்கலையின் மூலம் நடத்தப்படும் சட்ட படிப்பில் சேர, மாணவர்கள் ஆர்வமுடன் வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.அதேநேரம், "மாணவர்கள் ஆர்வம் காரணமாக, அரசு சட்டக் கல்லூரிக்கான தேவை அதிகரித்துள்ளதாக" அம்பேத்கர் சட்ட பல்கலை துணைவேந்தர் வணங்காமுடி தெரிவித்துள்ளார்.