Instructions and Procedure for online submission of Application Form for JEE(Main) - 2015


Instructions and Procedure for online submission of Application Form for JEE(Main) - 2015

    In case of Internet Explorer Use Internet Explorer 8 or above.
1.Please read the instructions, procedure and Information Bulletin carefully before you start filling the Application Form.
2.Candidate can apply for JEE(Main) - 2015 ‘ON-LINE’ only through official website of JEE(Main) (www.jeemain.nic.in).
3.Please ensure that you are filling genuine Application Form available online at JEE (Main) website (www.jeemain.nic.in).
4.Please ensure your eligibility as per the criteria laid down for JEE (Main), JEE (Advanced) and participating State Institutions (as applicable).
5.The CBSE has setup facilitation centers and incase the candidate is not able to fill-up his/her application at his/her own, he/she may approach the nearest facilitation center which will help him/her in submitting online application form only. The list of facilitation centers is available on the website jeemain.nic.in as well as in the information bulletin also. These facilitation centers will help the candidates free of cost.
6.Examination Fees
The fee (in Indian Rupees) for JEE(Main)-2015 is as follows:
Paper(s) AppearingPen and Paper Based ExaminationComputer Based Examination
(Paper-1(B.E./B.Tech.) only)
FOR EXAMINATION CENTRE OPTED IN INDIA
(General/OBC)(SC/ST/PWD/Girls)(General/OBC)(SC/ST/PWD/Girls)
JEE (Main) Paper-1(B.E./B.Tech.) or
JEE (Main) Paper-2 (B.Arch./B.Planning) only
1000500500250
Both
JEE (Main) Paper-1(B.E./B.Tech.) and
JEE (Main) Paper-2 (B.Arch./B.Planning)
18009001300650
FOR EXAMINATION CENTRE OPTED IN FOREIGN COUNTRY
JEE (Main) Paper-1(B.E./B.Tech.) or
JEE (Main) Paper-2 (B.Arch./B.Planning) only
2500125025001250
Both
JEE (Main) Paper-1(B.E./B.Tech.) and
JEE (Main) Paper-2 (B.Arch./B.Planning) 
3800190038001900
NOTE : 
(1) 
In case the examination fee is paid through credit/debit cards, the candidate will need to pay an additional processing charge as following
Credit Card: 1.20% of the examination fee plus the service tax as applicable.
Debit Card: 0.75% + taxes for examination fee up to Rs. 2000 and 1% + taxes for examination fee more than Rs. 2000.
(2) Application fee once paid will not be refunded (full or partial) under any circumstances.
7.The fee may be submitted either by any credit/debit card or through e-Challan of Syndicate/Canara/ICICI/HDFC Bank.
8.Candidate is allowed to submit only one Application Form. Multiple Applications of a candidate are liable to be rejected.
9.Application Procedure: 3 Simple Steps to be followed to apply online
Step 1:Fill the Online Application Form, choose your Password and note down system generated Application Number.

The candidate should supply all the details while filling the Online Application Form and also required to choose PASSWORD and Security Question and enter his/her Answer. After successful submission of the data, Application number will be generated and it will be used to complete the remaining Steps of the Application Form and also required for all future correspondence. For subsequent logins, candidate will be able to login directly with his/her respective system generated Application Number and chosen Password.
Step 2:Upload Scanned Images of Photograph, Signature and Thumb impression:

  • The scanned images of photograph, Signature and thumb impression should be in jpg/jpeg format only.
  • Size of the photo image must be greater than 4 kb and less than 40 kb.
  • Size of the signature image must be greater than 1 kb and less than 30 kb.
  • Size of the thumb impression image must be greater than 1 kb and less than 30 kb.
  • Dimension of photograph image should be 3.5 cm(width) x 4.5 cm(Height) only.
  • Dimension of signature image should be 3.5 cm(length) x 1.5 cm(Height) only.
  • Dimension of thumb impression image should be 3.5 cm(length) x 1.5 cm(Height) only.

NOTE : The Candidate will be able to modify/correct the particulars before the payment of fees. Once the payment of fee has been made / e-Challan downloaded, candidate particulars cannot be edited.
Step 3:Pay Examination Fee by debit/credit card or e-Challan of Syndicate/Canara/ICICI/HDFC Bank  :

  • Payment by Debit/Credit Card: The candidate has to select Debit/Credit Card option to pay the application fee and follow the online instruction to complete the payment of fee. After successful payment, candidate will be able to print the acknowledgment Page. In case the acknowledgment page is not generated after payment of fee then the transaction is cancelled and amount will be refunded to the candidate account with in a week and however the candidate has to make another transaction till the Acknowledgment Page is not generated


  • Payment by Bank e-challan: The candidate has to select bank (Syndicate/Canara/ICICI/HDFC) to deposit the application fee through e-Challan mode. As soon as he/she selects, an e-Challan will be generated containing specific details of the candidate along with amount to be paid. The candidate has to take a printout of the same and take it to the nearest branch of the selected bank for making payment. After the confirmation of fee deposited from Bank/CBSE, the candidate will be able to print the Acknowledgment Page. In case the Acknowledgment Page is not generated, the candidate should contact the concerned bank/branch to update his/her transaction.
10.Selection of date/slot of Computer Based Examination of Paper - 1:
The candidate, who has opted for Computer Based Examination of Paper – 1, should select the date/slot after payment of Examination Fee. The candidate, who does not select the date/slot, will be allotted the date/slot on random basis depending upon availability.
11.Important Instruction about PASSWORD
  • During online form filling, candidate will be required to choose PASSWORD and Security Question and its Answer. Candidate is advised to record/remember their password for all future logins.
  • The Password must be as per the following Password policy. 
    • Password must be 8 to 13 character long.
    • Password must have at least one Upper case alphabet.
    • Password must have at least one Lower case alphabet.
    • Password must have at least one numeric value.
    • Password must have at least one special characters eg.!@#$%^&*-
  • For subsequent logins, candidate will be able to login directly with their respective system generated Application Number and the chosen Password.
  • Candidate is advised not to disclose or share their password with anybody. Neither CBSE nor NIC will be responsible for violation or misuse of the password of a candidate.
  • Candidate can change his/her passwords after login, if desired.
  • Candidate should remember to log out at the end of their session so that the particulars of the candidate cannot be tampered or modified by unauthorized persons.
  • How to reset your Password : The following options are available to reset Password
    • Using Security Question & its Answer you chosen during Form filling .
    • Using a verification code sent via text message (SMS) to your Registered Mobile No.
    • Using a reset link sent via Email to your Registered Email address.
12.All correspondence related to JEE (Main) – 2015 should be addressed to the Executive Director, JEE (Main), Central Board of Secondary Education(CBSE), Plot No. 149, Block - H,Sector - 63, Noida - 201309, Distt- Gautam Budh Nagar (U.P.).
13.The application no. printed on the computer generated Acknowledgement Page must be mentioned in all such correspondences. It is therefore essential to note down the application number printed on the Acknowledgement Page.

 Please Check

ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், பொறியியல் சேர்வதற்காக நடத்தப்படும் ஜெ.இ.இ., மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் டிசம்பர் 18 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முழுவதும் ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும்.
www.jeemain.nic.in என்ற இணையதளம் சென்று, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். JEE தேர்வு, Main மற்றும் Advanced என்ற இரு நிலைகளில் நடத்தப்படுகிறது.
JEE (Main) தேர்வைப் பொறுத்தளவில், பி.டெக்., பி.இ., ஆகிய படிப்புகளில் சேர, paper - I எழுத வேண்டும். பி.ஆர்க்., மற்றும் பி.பிளானிங் ஆகிய படிப்புகளில் சேர, paper - II எழுத வேண்டும். இத்தேர்வுகளுக்கான syllabus மாறுபட்டவை.
Paper - I தேர்வு, ஆன்லைன் அல்லது ஆப்லைன் ஆகிய 2 முறைகளிலும், paper - II தேர்வு, ஆப்லைன் முறையிலும் மட்டுமே நடத்தப்படுகின்றன.
Paper - I மற்றும் II -க்கான ஆப்லைன் தேர்வு நடைபெறும் தேதி - ஏப்ரல் 4, 2015.
Paper - I க்கான ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி - ஏப்ரல் 10, 2015.
இரண்டு தேர்வுகளுக்குமான காலஅளவு - 3 மணி நேரங்கள். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இத்தேர்வு நடத்தப்படவுள்ளது.
2012, 2013ம் ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்தவர்கள் அல்லது 2015ம் ஆண்டு எழுதவுள்ளோர் விண்ணப்பிக்கலாம். அதேசமயம், 2012ம் ஆண்டு அல்லது அதற்கு முன்னதாக பிளஸ் 2 முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்க தகுதியில்லை.
தேர்ச்சிப்பெறும் பொருட்டு, JEE (Main) தேர்வை அதிகபட்சம் 3 முறை மட்டுமே எழுத முடியும்.
அனைத்து விரிவான தகவல்களுக்கும் www.jeemain.nic.in.

முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, என்ன என்பது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவான அறிவிப்பை வெளியிடாததால், விண்ணப்பதாரர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

 தமிழகத்தில், காலியாக உள்ள 1,807 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, இம்மாதம் 7ம் தேதி, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. ஜன., 10ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக, இம்மாதம் 10ம் தேதி முதல், 26ம் தேதி வரை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம், விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
26ம் தேதி மாலை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, வரும் 26ம் தேதி மாலை 5:00 மணிக்குள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நேரில் ஒப்படைக்க வேண்டும். அதன்படி, விண்ணப்பங்களை ஆயிரக்கணக்கானோர் பெற்று, பூர்த்திசெய்து சமர்ப்பித்து வருகின்றனர்.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க, முதுநிலை பட்ட மேற்படிப்புடன், பி.எட்., படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு படித்திருக்க வேண்டும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆனால், முதுநிலை படிப்பு மற்றும் பி.எட்., படிப்புக்கு, இணையான கல்வித் தகுதிகள் எவை எவை என்ற தகவலை, ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவாக தெரிவிக்கவில்லை என, முதுநிலை கல்வி படித்தவர்கள் புகார் கூறியுள்ளனர்.
இதுகுறித்து, விண்ணப்பதாரர்கள் சிலர் கூறியதாவது: இணையான கல்வித்தகுதி உள்ள பட்டப் படிப்பு என்ன என்பதே, எங்களுக்கு தெரியாமல் உள்ளது. இதற்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிடவில்லை. அதனால், குழப்பம் நீடிக்கிறது. நாங்கள் பல்வேறு நிலையில் குழம்பி, முதன்மை கல்வி அலுவலகங்களை அணுகும்போது, சரியான பதில் அங்கும் கிடைக்கவில்லை. இதனால், இந்த தேர்வுக்கு, கல்வித்தகுதி பெற்றிருக்கிறோமா என தெரியாமலேயே, விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து அளித்து வருகிறோம்.
அறிவிப்பு வெளியிடும்போதே, தேர்வுக்கு இணையான படிப்புகள் என்ன என்பதை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு வெளியிடாமல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதால், எங்களுக்கு விண்ணப்ப படிவத்திற்கான பணம் வீணாகுமோ என்ற கவலையுடனே விண்ணப்பித்துள்ளோம். எனவே, உடனடியாக முதுநிலை ஆசிரியர் தேர்விற்கு, இணையான கல்வி தகுதி என்ன என்ற அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பயன்படாது போகின்றனவா மாணவர்களுக்கான நடமாடும் உளவியல் மையங்கள்

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றபடி அல்லாமல், சொற்ப எண்ணிக்கையில், உளவியல் நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், நடமாடும் உளவியல் மையம் பயனின்றி போவதாக, பள்ளி ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
பள்ளி மாணவர்களின் மன அழுத்தம், உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு, நடமாடும் உளவியல் ஆலோசனை மையம், தமிழகத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இதற்காக, தமிழகத்தில் 10 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, ஒரு மண்டலத்தில் குறைந்தபட்சம் மூன்று மாவட்டங்களும், அதிகபட்சமாக நான்கு மாவட்டங்களும் அடங்கும். ஒவ்வொரு மண்டலத்திற்கும், தலா ஒரு உளவியல் ஆலோசகர் வீதம் மொத்தம் 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், மூன்று பெண்களும், ஏழு ஆண் உளவியல் நிபுணர்களும் உள்ளனர்.
கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களை ஒருங்கிணைத்து, ஒரு மண்டலமாக பிரித்து, மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாநிலம் முழுவதும் தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி என்பது குறித்து மட்டுமே 80 சதவீத ஆலோனைகள் வழங்கப்படுகிறது.
பாலியல் வன்கொடுமை பாதுகாப்பு, உடல்ரீதியான மாற்றங்கள் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வுகாண, உளவியல் நிபுணர்கள் அமர்த்தப்பட்டாலும், அதில் பெரிதாக பலனில்லை என்பதே உண்மை.
ஆண் உளவியல் நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டுள்ள மண்டலங்களில் மாணவிகளும், பெண் உளவியல் நிபுணர்கள் உள்ள மண்டலங்களில் மாணவர்களும், தங்கள் பாலியல் ரீதியான குழப்பங்களுக்கு விளக்கங்களை வெளிப்படையாக கேட்கவும், தெரிந்து கொள்ளவும் தயங்குகின்றனர்.
மேலும், இதுபோன்ற மாணவர்களுக்கு தொடர் கவுன்சிலிங் வழங்க வேண்டியது அவசியம். ஆனால், மூன்று அல்லது நான்கு மாவட்டங்களுக்கு ஒரு உளவியல் நிபுணர் மட்டுமே உள்ளதால், மாணவர்களின் தனிப்பட்ட பிரச்னைகளின் மீது கவனம் செலுத்த இயலவில்லை என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "வளர் இளம் பருவத்தில் உள்ள மாணவர்கள் பாலியல் மற்றும் உடல்ரீதியான பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். பெற்றோர்களிடமோ, ஆசிரியர்களிடமோ சொல்ல தயங்குகின்றனர்.
ஆனால், உளவியல் நிபுணர்களின் வித்தியாசமான அணுகுமுறை மாணவர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், பிளஸ்1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், இதுபோன்ற சந்தேகங்களை, பெண் உளவியல் நிபுணரிடம் கேட்டறிந்துகொள்ள தயக்கம் காண்பிக்கின்றனர். ஒவ்வொரு மண்டலத்துக்கும், ஆண் மற்றும் பெண் என இரண்டு உளவியல் நிபுணர்களை நியமிக்க வேண்டும்" என்றார்.
தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், "பாலியல் சார்ந்த பல்வேறு சந்தேகங்களால், தானாக தடம் மாறுபவர்கள், பிறரிடம் சிக்கிக் கொள்பவர்கள் என இரண்டு பிரிவு மாணவ, மாணவிகள் உள்ளனர்.
பள்ளிகளுக்கே ஆபாச வீடியோக்கள் கொண்ட மெமெரி கார்டு, மொபைல் போன் போன்றவற்றை திருட்டுத்தனமாக கொண்டு வருகின்றனர். இதுபோன்ற பொருட்களை பறிமுதல் செய்து கண்டிப்பதுடன், பெற்றோர்களை அழைத்து, தகவல் தெரிவிக்கிறோம். இதனால் மட்டும் மாணவர்கள் மத்தியில் மாற்றங்களை காண இயலவில்லை" என்றார்.

வசதிகள் ஏதுமின்றியும் தொடர்ந்து சாதிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்!

கோடிக்கணக்கில் செலவு செய்து அமைக்கப்பட்ட செயற்கை ஓடுகளம், செயற்கை புல்வெளி, கால்பந்து, ஹாக்கி மைதானங்கள், கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்தில் உள்ளரங்குகள் இருந்தால்தான் விளையாட்டு கனவு நனவாகுமா? சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தால் அடிப்படை வசதி எதுவுமின்றி பதக்கங்களை வெல்லலாம் என்பதை நிரூபித்து வருகின்றனர் அரசுப் பள்ளி மாணவர்கள்.மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ளது பி.அம்மாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி. 11 ஏக்கர் பரப்பளவில் 3 ஏக்கரில் வகுப்பறை கட்டடங்கள்; 613 மாணவர்களுடன் செயல்படுகிறது. வகுப்பறை கட்டடத்தைத் தாண்டி மீதியிடம் மைதானமாக வெற்றிடமாக இருக்கிறது. அதனாலென்ன? குத்துச்சண்டையும், டேக்வாண்டோவும், தடகளமுமாக வெற்றிகளை தக்கவைத்து வருகின்றனர் மாணவர்கள்.தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்தி வரும் தேசிய குத்துச்சண்டை போட்டிகளில் தொடர்ந்து மூன்றாண்டுகளாக தங்கப் பதக்கத்தை தக்க வைக்கும் மாணவி முத்துலட்சுமி, அடுத்து பதக்க கனவுக்காக போராடி வரும் மோனிஷா... கிராமத்திலிருந்து அதிகாலையில் ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு பயிற்சிக்காக துவங்குகிறது இவர்களின் பயணம்.கடந்தாண்டு உசிலை கல்வி மாவட்ட ஏ பிரிவு பள்ளிகளுக்கான போட்டிகளில் இப்பள்ளி முதலிடம் பெற்றது. மாவட்ட டேக்வாண்டோ திறந்தவெளி போட்டிகளில் 29 மாணவர்களை களமிறக்கியதில் 26 பேர் பதக்கங்களை வென்றனர். இதில் 6 தங்க பதக்கங்கள். கடந்தாண்டு நடந்த மாநில டேக்வாண்டோ போட்டியில் பவித்ரா வெண்கலம் வென்றார்.சிலம்பத்தில் 40 பேர் பயிற்சி பெறுகின்றனர். தடகளத்தில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் போட்டிகளில் 67 பேர் பயிற்சி பெறுகின்றனர். பயிற்சி என்றால் பள்ளியைச் சுற்றியுள்ள வயல்வெளியில் வெறும் கால்களில் பயிற்சி பெறுவதுதான். கபடி மற்றும் ஹேண்ட்பால் என அணியாக விளையாடும் போட்டிகளிலும் பதக்கம் பெற்றுள்ளனர்.கடந்த வாரம் நடந்த மண்டல பள்ளிகளுக்கான 14 வயது பிரிவு தடகளப் போட்டிகளில் மாணவி சுகப்ரியா 400 மீட்டர், 600 மீட்டர் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய மூன்றிலும் முதலிடம் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார். அப்படியே மாநிலப் போட்டிக்கும் தகுதி பெற்றார். ஜூடோ போட்டியில் மாணவர்கள் பிரிவில் மூன்று தங்கம், நான்கு வெள்ளி, இரண்டு வெண்கலம், மாணவிகள் பிரிவில் மூன்று தங்கம், மூன்று வெள்ளி, நான்கு வெண்கலம் என 19 பதக்கங்களை வென்றனர்; டேக்வாண்டோ போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்களை வென்றனர்.எப்படி சாதிக்க முடிந்தது?உடற்கல்வி ஆசிரியர் சந்திரசேகர் பேசுகிறார்... ஏழாண்டுகளாக இப்பள்ளியில் பணிபுரிகிறேன். மற்ற விளையாட்டுகளை விட புதிய விளையாட்டுகளை மாணவர்கள் எளிதாக கற்றுக் கொள்கின்றனர். செலவும் குறைவு. ஆனால் டேக்வாண்டோ, ஜூடோ, சிலம்பப் போட்டிகளில் பங்கேற்பதற்கு சீருடை, கவசம் ஆகியவற்றுக்குத்தான் ஆயிரக்கணக்கில் செலவாகிறது. அதனால் அதிகபட்சம் இரண்டு உடைகள் வாங்கி, மாணவர்களுக்கு மாற்றி மாற்றி அணிவித்து போட்டிகளுக்கு அனுப்புகிறோம்.எந்த விளையாட்டுக்கும் எங்கள் மாணவர்களுக்கு தனி பயிற்சியாளர் இல்லை. ஏனென்றால் பணம் கொடுத்து கற்றுக் கொள்ளும் அளவிற்கு அவர்கள் வசதியானவர்கள் இல்லை. கிராமப்புறத்தில் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருவதால் மாணவர்களின் கவனம் வேறு திசைக்கு மாறாமல் பாதுகாக்க முடிகிறது.தலைமையாசிரியர் குமரேசன்: கிராமப்புற பெற்றோருக்கு விளையாட்டின் அருமை புரிவதில்லை. குறிப்பாக பெண் குழந்தைகள் விளையாடுவதை பிரச்னையாக பார்க்கின்றனர். குத்துச்சண்டை, ஜூடோ, தடகளப் போட்டிகளில் அடிபட்டால் வாழ்க்கை போய்விடும் என பயப்படுகின்றனர்.மாணவி சுகப்ரியா மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றும், பெற்றோர் அனுப்ப மறுத்தனர். மாநிலப் போட்டியில் பங்கேற்கும் சான்றிதழ் மூலம் கிடைக்கும் நன்மைகளை சொன்னபிறகே சம்மதித்தனர். விளையாட்டின் மூலம் எங்கள் பிள்ளைகள் பல்வேறு வேலை வாய்ப்பை பெற வேண்டும் என்பதே எங்கள் ஆசை என்றார்.

அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சிக்கான நுழைவு தேர்வு எழுத, இணையதளம் மூலம் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தமிழக அரசின் குடிமைப் பணி தேர்வு பயிற்சி மைய முதல்நிலை பயிற்சிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் வரும் 23ம் தேதி நுழைவுத் தேர்வு நடக்கிறது.
நுழைவு தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் நுழைவுச் சீட்டுகளை மைய இணையதளம் www.civilservicecoaching.com மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள், தாங்கள் தேர்வு எழுத தெரிவு செய்துள்ள மாவட்ட தேர்வு மையத்திற்கு(மாவட்ட தேர்வு மைய விவரங்களை இணைய தளத்தில் காணவும்) தேர்வு நாள் அன்று 1 மணி நேரம் முன்னதாகவே சென்று நுழைவு சீட்டுக்களை பெற்று, தேர்வு எழுதலாம்.
சென்னை மாவட்டத்தைச் தேர்வு செய்த மாணவர்கள் பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள் 044-24621475/9940636267 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தேர்வு மைய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம். இத்தகவலை விழுப்புரம் கலெக்டர் சம்பத் தெரிவித்துள்ளார்.

பகுதிநேர ஆசிரியர்களுக்கான சம்பளத்தை, 5,000 ரூபாயில் இருந்து, 7,000 ரூபாயாக உயர்த்தி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ், கடந்த 2011ல், அரசு பள்ளிகளில், தையல், ஓவியம், உடற்பயிற்சி, இசை ஆகியவற்றிற்கு, 16,549 பகுதி நேர ஆசிரியர், 5,000 ரூபாய் சம்பளத்தில் நியமிக்கப்பட்டனர்.
குறைந்த சம்பளம், நீண்டதுார பயணம் உள்ளிட்ட பிரச்னைகளால், 2,000த்திற்கும் மேற்பட்டோர், ராஜினாமா செய்து விட்டனர். 2,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது, 12 ஆயிரம் பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கான சம்பளம் 7,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, கடந்த ஏப்ரலில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அமலுக்கு வரவில்லை.
இதுகுறித்து, சில நாட்களுக்கு முன், அனைத்து பகுதிநேர ஆசிரியர்களும், கல்வித்துறை செயலர் சபிதாவிடம், கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதையடுத்து, சபிதா வெளியிட்ட உத்தரவில், "அனைத்து பகுதிநேர ஆசிரியர்களுக்கும், கடந்த ஏப்., முதல், 7,000 ரூபாய் சம்பளம் என கணக்கிட்டு, நிலுவை தொகையுடன் வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மூன்றாம் மொழிப்பாடமாக ஜெர்மன் தொடரும்’ என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மூன்றாம் மொழிப்பாடமாக இருந்த அயல்நாட்டு மொழியான ஜெர்மன் மாற்றப்பட்டு, சமஸ்கிருதம் கற்றுக் கொடுக்கப்படும் என, கடந்த வாரம் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. சமஸ்கிருத மொழிக்கு, மத்திய அரசு முக்கியத்துவம் கொடுப்பதாக புகார் கூறப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ’மூன்றாம் மொழிப்பாடமாக, ஜெர்மன் தொடரும். அதை, கூடுதல் மொழிப்பாடமாகவும், பொழுதுபோக்கிற்காகவும் மாணவர்கள் படிக்கலாம்; அதற்கு எந்த தடையும் இல்லை. அந்த மொழியை கற்றுக் கொடுப்பதற்காக, ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்களும் பணியில் தொடர்வர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது

அதிக கட்டணத்தால், தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் சேர முடியாத, 28 மாணவர்கள், உச்ச நீதிமன்றத்தை அணுக, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த கல்வியாண்டில், மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களில், 28 பேருக்கு, அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இடம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தது. கல்விக் கட்டணம் அதிகமாக உள்ளதால், தனியார் கல்லுாரிகளில் சேர, அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அதேநேரத்தில், சென்னை, வண்டலுாரில் உள்ள தாகூர் மருத்துவக் கல்லுாரி, திருச்சியில் உள்ள சென்னை மருத்துவக் கல்லுாரிக்கு, மாணவர்கள் பட்டியலை, தேர்வுக் குழு அனுப்பியது.
அதன் அடிப்படையில், மாணவர் சேர்க்கை பட்டியலை, இரண்டு கல்லுாரிகளும் வெளியிட்டன. இந்தப் பட்டியலில் இடம் பெற்றவர்கள், தங்களை விட குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் என்றும், அரசு ஒதுக்கீட்டின் கீழ், இந்த கல்லுாரிகளில் தங்களை சேர்க்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி, உயர் நீதிமன்றத்தில் 28 பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
மனுக்களை விசாரித்த நீதிபதி ராமசுப்ரமணியன் பிறப்பித்த உத்தரவு: தகுதி அடிப்படையிலான பட்டியலை அனுப்புவதற்கு பதில், மனுதாரர்களைப் போன்ற தகுதியுள்ளவர்களை விட்டு விட்டு, வேறு பட்டியலை தேர்வுக்குழு அனுப்பியதாக தெரிகிறது.
விளக்க குறிப்பேட்டில், தனியார் கல்லுாரியில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேர விரும்பவில்லை என்றால், அடுத்ததாக வரும் கவுன்சிலிங்கில், அந்த கல்லுாரியில் இடம் ஒதுக்க கோர முடியாது என கூறப்பட்டுள்ளது. இதை, அரசு பின்பற்றியதாக தெரிகிறது. எனவே, தனியார் கல்லுாரிகளில் கிடைத்த இடங்களை ஏற்காதவர்களின் பெயர்களை நீக்கி விட்டு, வேறு பட்டியலை, இரண்டு கல்லுாரிகளுக்கும் அனுப்பி உள்ளது. அதனால், மனுதாரர்களை விட குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு, இரண்டு கல்லுாரிகளிலும் இடம் கிடைத்துள்ளது.
தனியார் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு 3 லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவே, அரசு கல்லுாரிகள் என்றால் 12 ஆயிரம் ரூபாய்தான். அதிக கட்டணம் செலுத்த முடியாததால்தான், தனியார் கல்லுாரிகளில் கிடைத்த ஒதுக்கீட்டை, மனுதாரர்களால் ஏற்க முடியவில்லை.
தகுதி பட்டியலில் இருந்து, மனுதாரர்களை நீக்கி இருக்கக்கூடாது. அவர்களை விட குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களின் பட்டியலை அனுப்பியதன் மூலம், மனுதாரர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இரண்டு கல்லுாரிகளுக்கும் அனுப்பப்பட்ட பட்டியலை ரத்து செய்தால், புதிய குழப்பம் ஏற்படும். அந்தக் கல்லுாரிகளில் ஏற்கனவே மாணவர்கள் சேர்க்கப்பட்டு, படிப்பை துவங்கி விட்டனர்.
அந்த கல்லுாரிகளில், 84 இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களுக்கு பட்டியலை அனுப்பும்படி உத்தரவிட்டால், எந்த கொள்கையை அரசு பின்பற்றும் என தெரியவில்லை. காலியிடங்களில், மனுதாரர்களை சேர்க்க உத்தரவிட்டால், இவர்களை விட அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க ஆரம்பித்து விடுவர்.
எனவே, மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. மனுதாரர்கள் அல்லது இரண்டு தனியார் கல்லுாரிகள் அல்லது தேர்வுக் குழு, உச்ச நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் கோரலாம். இவ்வாறு நீதிபதி ராமசுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

உடற்கல்வி, ஓவியம், தையல், இசை போன்ற சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) தேர்வு மூலமே தேர்வு செய்யப்படுவர் என, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல் மற்றும் இசை என, சிறப்பாசிரியர்கள், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், இனவாரி சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். கடந்த 2012ல், சிறப்பாசிரியர் பிரிவில், உடற்கல்வி ஆசிரியர்கள் 1,028 பேரை நியமிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்தது. வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், மாநில அளவில் தேர்வானவர்கள் பட்டியலை வெளியிட்டது. இதை எதிர்த்து முத்துவேலன் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
விசாரணை முடிவில், சிறப்பாசிரியர் பணிக்கு, வேலைவாய்ப்பு பதிவுமூப்பு பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் தமிழகத்தில் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற்று, முழு தகுதி அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்.மேலும், எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு அமைய வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, சிறப்பு ஆசிரியர்களை தேர்வுசெய்ய, புதிய விதிகளை உருவாக்க, டி.ஆர்.பி.,யிடம், தமிழக அரசு கேட்டுக் கொண்டது.
இதன்படி, டி.ஆர்.பி., அளித்த புதிய விதிமுறைகளை, பரிசீலித்த தமிழக அரசு, அவற்றை அமல்படுத்தி, அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, சிறப்பாசிரியர்கள், வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் அல்லாமல், டி.ஆர்.பி.,யால் நடத்தப்படும் தேர்வு அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்படுவர். வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் பத்திரிகை விளம்பரங்கள் மூலம் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படும்.
மொத்தம் 100 மதிப்பெண்களில், 95 மதிப்பெண்கள் எழுத்துத் தேர்விற்கும், 5 மதிப்பெண்கள் நேர்முகத் தேர்வுக்கும் வழங்கப்படும். ஒவ்வொரு காலியிடத்திற்கும், ஐந்து விண்ணப்பதாரர்கள், நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.
மாநில, கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், பாடத்திட்டத்தை தயாரிக்கும். தேர்வு, மூன்று மணி நேரம், ஒரே தாளாக நடத்தப்படும். அப்ஜக்டிவ் அடிப்படையில், 190 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும், அரை மதிப்பெண் என 95 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
தேர்வு, நேர்முகத்தேர்வு நடத்துதல், தேர்வுத்தாள் திருத்தும் பணி, இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வர்கள் பட்டியல் வெளியிடுதல் என அனைத்து பணிகளையும் டி.ஆர்.பி., மேற்கொள்ளும். தேர்விற்கு 500 ரூபாய் கட்டணம்; உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு  அரசாணையில் கூறப்பட்டுள்ளது

Applications are invited for 485 Vacancies of Anganwadi Worker, Mini Anganwadi Worker and Anganwadi Helper Posts in Integrated Child Development Services Scheme (ICDS) Centers Tamil Nadu


Integrated Child Development Services Scheme (ICDS) Recruitments (www.tngovernmentjobs.in)
Integrated Child Development Services Scheme (ICDS)
Chennai
http://www.icds.tn.nic.in/

Applications are invited for 485 Vacancies of Anganwadi Worker, Mini Anganwadi Worker and Anganwadi Helper Posts in Integrated Child Development Services Scheme (ICDS) Centers Tamil Nadu


Advertisement No.
Advertisement date 29.10.2014
Last date 11.11.2014 

Posts : 
  • Anganwadi Worker - 151 posts - Pay 2500-5000 GP 500 - SSLC Pass - Age 25-35 years
  • Mini Anganwadi Worker - 36 posts - Pay 1300-3000 GP 300 - SSLC Pass - Age 25-35 years 
  • Anganwadi Helper - 298 posts - Pay 1300-3000 GP 300 - to know read /write - Age 20-40 years 

Applications are invited for Driver, Conductor, Assistant Engineer and Junior Engineer (Training) Posts in State Express Transport Corporation (SETC) in Chennai, Kanchipuram, Thiruvannamalai and Thiruvallur Districts


State Express Transport Corporation (SETC)
Chennai, Tamil Nadu
PSU of Govt of Tamilnadu

Applications are invited for Driver, Conductor, Assistant Engineer and Junior Engineer (Training) Posts in State Express Transport Corporation (SETC) in Chennai, Kanchipuram, Thiruvannamalai and Thiruvallur Districts


Advertisement No.01-03/SETC/2014
Advertisement date 02.11.2014
Last date Application Sales 20.11.2014
Last date 08.12.2014

Posts :
  • Driver cum Conductor - 260 Posts - 10th Std Pass, HMV Driving Licence, Conductor Licence and valid Fird Aid Certificate; Height 160 cms ; Weight 48 kg - Age 40 years [Notification]
  • Assistant Engineer (Training) - 3 Posts - First Class Bachelor's Degree in Mechanical Engineering or Automobile Engineering (BE / BTech) and one year apprenticeship must be completed - Age 30 years [Notification]
  • Junior Engineer (Training) - 1 Post - Diploma in Mechanical Engineering or Diploma in Automobile Engineering with one year apprenticeship training completed - Age 30 years [Notification]

General Instructions :
Application Forms can be obtained from Head Quarters of State Express Transport Corporation (SETC), Pallavan Salai, Chennai 600 002.Cost of Application Form is Rs.100 by Demand Draft in favour of "The Managing Director, State Express Transport Corporation (Tamilnadu) Ltd" payable at ''Chennai''.Application forms can be obtained through post by paying Rs.50 extra along with Application Fee.

அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழா; 1.84 லட்சம் பேருக்கு பட்டம்!

பட்டினியால் அவதிக்கு உள்ளாகும் 76 நாடுகள் பட்டியலில், இந்தியா 55வது இடத்தில் உள்ளது. தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல், குறைவான எடையுடன், அதிகமான குழந்தைகள், இந்தியாவில் பிறக்கின்றன,” என, வேளாண் விஞ்ஞானி, எம்.எஸ்.சுவாமிநாதன் வேதனை தெரிவித்தார்.
சென்னை, அண்ணா பல்கலையின், 35வது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில், நவ. 5ம் தேதி காலை நடந்தது. கவர்னர், ரோசய்யா தலைமை தாங்கினார். பல்கலை துணைவேந்தர் ராஜாராம் வரவேற்றார்.
விழாவில், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:
உலகள வில், ஒரு பக்கம் சத்தான உணவு கிடைக்காமல், குழந்தைகள் பாதிக்கும் நிலையும், மற்றொரு பக்கம் உணவுப் பொருட்கள் அதிகளவில் வீணாகும் நிலையும் இருக்கிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில், அதிகளவில், உணவுப் பொருட்களை உற்பத்தி செய்தாலும், அவை முறையாக சேமிக்கப்படுவதில்லை. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், மக்கள் அதிகளவில் உணவுப் பொருட்களை வீணடிக்கின்றனர்.
சர்வதேச அளவில் அதிக பட்டினி நிலவும் 76 நாடுகளில், இந்தியா 55வது இடத்தில் உள்ளது. நாட்டில், சத்தான உணவுப்பொருள் கிடைக்காததால், எடை குறைவான குழந்தைகள் அதிகம் பிறக்கின்றன. இதுபோன்ற நிலை மாற வேண்டும். அண்ணா பல்கலையில், ’பயோ - டெக்னாலஜி’ துறை சார்ந்து, புதிய கொள்கைகள் இல்லை. அதை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, சுவாமிநாதன் பேசினார்.
விழாவில், அனைத்து பாடப் பிரிவுகளிலும், முதலிடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு, தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டன. 1,010 பேர், பல்வேறு துறைகளில், பிஎச்.டி., பட்டங்களை பெற்றனர். இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளில், 1.84 லட்சம் பேர், பட்டம் பெற்றனர்.

அடுத்தாண்டு முதல், புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

ஒரு கல்வி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் இதுகுறித்து கூறியதாவது: புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு விரைவில் தொடங்கும். கல்விக் கொள்கையில், அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் ஆகியோர் மட்டுமே பங்களித்தால் போதாது, பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களும் பங்கெடுக்க வேண்டும்.
இந்த நாட்டின் தலைவிதி, நெடுங்காலமாக, அரசியல் செய்தோரிடம் சிக்கிக் கொண்டிருந்தது. இப்போதுதான், அது விடுதலையடைவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
கல்வித் தொடர்பான மாற்றம் என்பது ஒரு அரசில் மட்டுமே நிகழ்ந்துவிடாது. அது அடிமட்ட அளவிலும் நிகழ வேண்டும் மற்றும் மாற்றத்தைக் கொண்டுவரும் வாகனங்களாக ஆசிரியர்கள் திகழ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அந்த நிகழ்ச்சியில், பள்ளிகளில், முழுமையான சுய-மதிப்பாய்வை மேற்கொள்ளும் வகையிலான, சரன்ஷ் என்ற அம்சத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த அம்சத்தின் மூலம், கற்றலில் குறைபாடுள்ள மாணவர்கள், பெரிதும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பொதுத்தேர்வுகளில் புதிய முறையில் கேள்வித்தாள்: தமிழக அரசுக்குப் பரிந்துரை


 பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், பாடப் புத்தகங்களில் உள்ள கேள்விகளை, அப்படியே கேட்கக்கூடாது. பாடப் பொருள் சார்ந்து, அதேநேரத்தில் பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து கேள்வி கேட்க வேண்டும் என, தேர்வு சீர்திருத்தக் குழு, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
சீர்திருத்தம் குறித்து ஆய்வு: பொதுத்தேர்வு விதிமுறைகள் மற்றும் கேள்வித்தாளில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தம் குறித்து ஆய்வுசெய்து, தமிழக அரசுக்கு பரிந்துரை அறிக்கை சமர்ப்பிக்க, சி.பி.எஸ்.இ., (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) முன்னாள் தலைவர், பாலசுப்ரமணியன் தலைமையில், குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில், கல்வித்துறை இயக்குனர்கள் உட்பட பலர் இடம்பெற்று உள்ளனர்.
செய்ய வேண்டிய சீர்திருத்தம் குறித்து, ஏற்கனவே பல கூட்டங்களை நடத்தி, வரைவு அறிக்கை மற்றும் பரிந்துரை அறிக்கையை, பாலசுப்ரமணியன் குழு தயாரித்து, தமிழக அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. கோப்பு, முதல்வரிடம் செல்வதற்கு முன், இயக்குனர்கள் பார்வைக்கு வரைவு அறிக்கையை சமர்ப்பித்து, தேவையான ஆலோசனையை பெற வேண்டும் என, குழுவிற்கு உத்தரவிடப்பட்டது.
வரைவு அறிக்கை விவரம்: அதன்படி, அனைவருக்கும் கல்வி திட்ட மாநில இயக்குனர் பூஜா குல்கர்னி, பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன், மெட்ரிக் கல்வி இயக்குனர் பிச்சை ஆகியோருக்கு, வரைவு அறிக்கை விவரம் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து துறை வட்டாரம் கூறியதாவது: பூஜா குல்கர்னி மட்டும், அறிக்கையின் விவரங்களை முழுமையாக படிக்க வேண்டும், எனவே சில நாட்கள் கால அவகாசம் வேண்டும் என கேட்டுக் கொண்டார். எனவே, ஒரு வாரத்திற்குப் பின், மாற்று கருத்து இருந்தால் அதுகுறித்து ஆலோசித்து, வரைவு அறிக்கையில் சேர்க்கப்படும்.
தேர்வு சீர்திருத்தக் குழு, 100 பக்க வரைவு அறிக்கையை தயாரித்துள்ளது. அதில் பரிந்துரைகள் மட்டும் 10 பக்கங்களில் இடம் பெற்றுள்ளன. பொதுத்தேர்வுக்கான விதிகள், அரசாணைகள், தற்போது தனித்தனியாக உள்ளன. இப்படி இல்லாமல், அனைத்து விதிகள், அரசாணைகளை பரிசீலனை செய்து, தேவையானவற்றை மட்டும் ஒருங்கிணைத்து, தேர்வுக்கான சட்ட விதிமுறைகளாக தொகுத்து வெளியிட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பாடப் புத்தகங்களில் உள்ள கேள்விகளை, அப்படியே, ஈ அடிச்சான் காப்பி போல், பொதுத்தேர்வுகளில் கேட்கக்கூடாது. பாடப் பொருள் சார்ந்து, அதே நேரத்தில் வெளியில் இருந்து, கேள்விகளை கேட்க வேண்டும்; மாணவர்களின் அறிவை சோதிக்கும் வகையில், கேள்விகள் இருக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு, தமிழக அரசு விரைவில் ஒப்புதல் அளித்ததும், அடுத்த கல்வி ஆண்டில் (2015 - 16) இருந்து, சீர்திருத்த விதிமுறைகள் அமலுக்கு வரும். இவ்வாறு துறை வட்டாரம் தெரிவித்தது.

அங்கீகாரமற்ற படிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம்: யு.ஜி.சி. அறிவுறுத்தல்

 அரசு, தனியார், நிகர்நிலை பல்கலைகளின் கல்வி மையங்கள் என்ற பெயரில், செயல்படும் நிறுவனங்கள், அங்கீகாரமில்லாத படிப்புகளை நடத்துவதால், அவற்றை நம்ப வேண்டாம் என, பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி., மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.
அரசு, தனியார், நிகர்நிலை பல்கலைகள், கல்லூரிகள் என, எந்த கல்வி நிறுவனமாக இருந்தாலும், அதற்கான அங்கீகாரம், பாடங்களுக்கான அனுமதி என அனைத்தும் யு.ஜி.சி.,யின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன.
நாடு முழுவதும் செயல்படும், பல்கலைகள், அவை அனுமதி பெற்றுள்ள வரம்பிற்குள் மட்டுமே, கல்வி வளாகங்கள், கல்வி மையங்களை அமைக்க முடியும். வரம்பை தாண்டி கல்வி மையங்களை அமைக்கக் கூடாது என யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.
மேலும், அரசு, தனியார், நிகர்நிலை பல்கலைகளின் அங்கீகாரம் பெற்ற மையங்கள் என செயல்படும் சிறிய கல்வி மையங்கள் பல, அனுமதி பெறாத பல படிப்புகளை நடத்தி வருவதாக புகார்கள் எழுந்தன. இப்புகார்கள் அடிப்படையில், கடந்தாண்டு ஜூலை 12ம் தேதி, இதுகுறித்த பொது அறிவிப்பு ஒன்றை யு.ஜி.சி., வெளியிட்டது.
இந்த நிலையில், அங்கீகாரம் இல்லாத கல்வி மையங்கள், வளாக மையங்கள் சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதை யு.ஜி.சி., கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து, மீண்டும் அதே பொது அறிவிப்பை யு.ஜி.சி., வெளியிட்டு, இதுபோன்ற அங்கீகாரம் பெறாத கல்வி மையங்களில் சேர வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.

ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி இல்லாததால் பாதிக்கப்படும் மாணவர்கள்; வீணாகும் லேப்டாப்

தொடக்கக் கல்வித்துறையின்கீழ், மாநிலம் முழுவதும் கற்பித்தல் பணிக்காக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட லேப்டாப், கம்ப்யூட்டர் சார்ந்த நவீன பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு இல்லாத காரணத்தால், பயனற்று பள்ளிகளில் வீணாகி வருகிறது.
தொடக்கல்வித்துறைக்கு உட்பட்ட 8,026 நடுநிலைப் பள்ளிகளுக்கு நான்கு கட்டங்களாக, லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பிலும், பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டன. இன்றைய உலகில் அனைத்து செயல்பாடுகளும் தொழில்நுட்பத்தை சார்ந்தே உள்ளது என்பதை உணர்ந்த பள்ளிக்கல்வித்துறை, கனெக்டிவ் கிளாஸ் ரூம், மாணவர்களுக்கு இலவச லேப்டாப் உட்பட பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.
இதன்படி, ஒவ்வொரு ஆசிரியரும் குறைந்தபட்சம் வாரத்தில் ஐந்து பாடவேளைகள் கற்பித்தலுக்கு, லேப்டாப் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மேலும், ஆசிரியர்கள் கற்பித்தல் பணியை மேற்கொள்வதை முறையாக, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மேற்பார்வையில், கண்காணிக்கவும், உணவு இடைவேளைக்கு முன்பு அல்லது பின்பு வகுப்புகளை கம்ப்யூட்டர் வழி கற்பித்தல் முறைக்கு பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு, அதற்கான தொகுப்புகளும் வழங்கப்பட்டன.
லேப்டாப் சார்ந்த அடிப்படை பயிற்சிகள் இல்லாத பெரும்பாலான ஆசிரியர்கள், கற்பித்தல் பணிக்கு லேப்டாப் பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களும் தொழில்நுட்பம் சார்நத அறிவை தொடக்க நிலைகளில் பெற இயலாமல், உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சமயங்களில் சிரமப்படும் சூழல்கள் உருவாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில், 244 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு சில பள்ளிகளை தவிர பெரும்பாலான பள்ளிகளில் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்கள் வெறும் அலங்கார பொருட்களாகவே வைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் காந்திமதி கூறுகையில், "கற்பித்தல் பணிக்கு, லேப்டாப் பயன்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பள்ளி தலைமையாசிரியர்களிடம் தொடர்ந்து இதுகுறித்து அறிவுறுத்தப்படுவதுடன், நடுநிலைப் பள்ளிகளில் மூன்று அல்லது நான்கு லேப்டாப் இருக்கும் பட்சத்தில், தொடக்கப் பள்ளிகளுக்கு ஒன்று வழங்குமாறும் தெரிவித்துள்ளோம். உதவி தொடக்க கல்வி அலுவலர் மூலம், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

தேசிய திறனாய்வு தேர்வில் மாணவர்கள் ஆர்வக் குறைவு: கல்வியாளர்கள் கவலை

மாநிலம் முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு நடந்தது. பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இத்தேர்வில் ஈடுபாடு காண்பிப்பதில்லை என்று கல்வியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தேர்வில், 3055 மாணவர்களே பங்கேற்றனர். மத்திய அரசு, நாடு முழுவதும், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, போட்டித் தேர்வை நடத்தி வருகிறது. தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 முதல், பிஎச்.டி., வரை, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் இத்தேர்வின், முதல் கட்ட தேர்வு, மாநிலம் முழுவதும் 350 தேர்வு மையங்களில் நடந்தது. இத்தேர்வில், பெரும்பாலும் சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களே ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.
தேசிய திறனாய்வு தேர்வு குறித்த போதிய விழிப்புணர்வு, பயிற்சிக் குறைவால் அரசு பள்ளி மாணவர்கள் முற்றிலும் இத்தேர்வை புறக்கணிப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பெரும்பாலான பள்ளிகள் இத்தேர்வில் ஆர்வம் காண்பிப்பதில்லை. இதனால், திறமைகள் இருந்தும் பல மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கோவை மாவட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதும் நிலையில், தேசிய திறனாய்வு தேர்வில் வெறும் 3055 மாணவர்களே பங்கேற்றுள்ளனர். மொத்தமுள்ள 400 பள்ளிகளில், 195 பள்ளிகளிலிருந்து, பள்ளிக்கு இரண்டு அல்லது மூன்று மாணவர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.
பொதுத்தேர்வுகளில் பெரும்பாலான மாணவர்கள், 70 சதவீதத்திற்கு மேலாக மதிப்பெண்களை அள்ளிச்செல்லும் நிலையில், இதுபோன்ற திறனாய்வு தேர்வுகளில் பங்கேற்க தயக்கம் காண்பிப்பது ஏன்? என்பது கேள்விக்குறியே. மேலும், ஆன்-லைன் முறையில், பள்ளிகள் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும் என்பதால், பள்ளி நிர்வாகங்கள் போதிய கவனம் செலுத்தாததால், திறமைமிக்க மாணவர்களும் விண்ணப்பிக்க இயலாமல் போனது.
முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், "தேசிய திறனாய்வு தேர்வு குறித்து கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கோவையில் அதிக மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அரசு பள்ளிகள், கிராமப்புற மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரித்து பயிற்சிகள் அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கும் இது குறித்து அறிவுறுத்தப்படும்" என்றார்.

உங்களுக்கான சரியான எம்.பி.ஏ. படிப்பை மேற்கொள்ளும் பொருட்டு, சில ஆலோசனைகளை இக்கட்டுரை அளிக்கிறது.

இயல்பாகவே, வணிகம் அல்லது நிர்வாகம் தொடர்பான ஆர்வமுள்ளவர்களுக்கு எம்.பி.ஏ. படிப்பு பொருத்தமானது. இந்த இயற்கையான ஆர்வம் இல்லாதவர்கள், எம்.பி.ஏ. படிக்கும் ஒரு நிலை வருகையில், அவர்கள் தங்களின் நோக்கம் என்ன என்பதை நிர்ணயித்து வைத்துக்கொள்வது அவசியம்.
அதிக சம்பளம் மற்றும் பதவி உயர்வு ஆகிய விஷயங்களை மட்டுமே மனதில் வைத்து, MBA படிக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அதனூடாக, எம்.பி.ஏ. படிப்பை எந்த நேரத்தில் அல்லது சூழலில் மேற்கொள்கிறோம்? அதற்கு இது சரியான தருணமா? என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும்.
பணி அனுபவம்
தொழில்துறை மற்றும் சந்தை நிலவரங்களைப் பற்றி ஒருவர் அறிந்துகொள்ள வேண்டுமெனில், அவருக்கு அடிப்படையில், சிறிதுகாலம் பணி அனுபவம் தேவை. தனது பணி அனுபவத்தின் மூலமே, ஒருவர் தனது எதிர்கால வளர்ச்சிக்கு, MBA படிப்பில் என்ன specialisation செய்யலாம் என்பதை தீர்மானிப்பது எளிது.
பணி அனுபவமே, உங்களிடமிருந்து சந்தை என்ன எதிர்பார்க்கிறது என்பதையும், அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற நீங்கள் என்ன specialisation படிக்க வேண்டும் என்பதையும் தீர்மானித்து, அதன்மூலம் நீங்கள், தேவைக்கேற்ற திறன்களை வளர்த்துக்கொள்ள உதவும்.
அதேசமயம், பணி அனுபவம் என்பது MBA படிக்க விரும்பும் அனைவருக்கும் கட்டாயம் வேண்டும் என்பதல்ல. புதிதாக பட்டப் படிப்பை முடித்த ஒருவர், தனக்குப் பொருத்தமான MBA படிப்பை தேர்வுசெய்ய, போதுமான சந்தை ஆராய்ச்சி, முன்னாள் மாணவர்களின் கருத்துக்கள் ஆகியவற்றின் மூலம் ஒரு தெளிவான முடிவை எடுக்கலாம்.
தொழில்பூர்வ இலக்குகளை தீர்மானித்தல்
MBA முடித்தப் பிறகு, நீங்கள் தற்போது பணிபுரியும் அதே தொழில்துறையில் நீடிக்கப் போகிறீர்களா? அல்லது புதிய துறைக்கு செல்லவுள்ளீர்களா? அல்லது உங்களின் சொந்த வணிகத்தை தொடங்க விரும்புகிறீர்களா? என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும். நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதை வைத்தே, உங்களின் முடிவுகள் அமையும்.
எனவே, MBA படிப்பு மற்றும் அதற்கான கல்லூரியைத் தேர்வுசெய்யும்போது, மேற்கண்ட விஷயங்கள் குறித்த ஒரு தெளிவான முடிவு உங்களிடம் இருக்க வேண்டும்.
2 ஆண்டு ரெகுலர் MBA? அல்லது 1 ஆண்டு எக்சிகியூடிவ் MBA?
மேற்கண்ட இரண்டு வகை MBA படிப்புகளில், எது உங்களுக்கானது என்பதை முடிவு செய்வது அவசியமான ஒன்று. படிப்பிற்கான செலவு, உடன் படிப்பவர்களின் வயது,, கற்றல் அனுபவம் மற்றும் வேலை வாய்ப்பு திட்டங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இரண்டில் ஒன்றை தேர்வுசெய்ய வேண்டும்.
2 ஆண்டு MBA படிப்பு என்பது, ஆழமான விஷயங்களை அறிந்துகொள்ள உதவுவதுடன், நல்ல கற்றல் அனுபவத்தையும் தருகிறது. அதேசமயம், உங்களுக்கு 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணி அனுபவம் இருந்து, ஒரே தொழிலில் தொடர விரும்பினால், 1 ஆண்டு executive MBA படிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Feedback மற்றும் ஆராய்ச்சி
தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோரிடமிருந்து பெறும் feedback, சரியான படிப்பை தேர்வுசெய்ய உதவும். முன்னாள் மாணவர், கல்லூரியின் ஆசிரியர்கள், நெட்வொர்க்கிங், அங்கே படித்தவர்கள் பெற்ற வேலைவாய்ப்பு குறித்த புள்ளி விபரங்கள் போன்ற முக்கிய அம்சங்களை, நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், சந்தைக்குத் தேவையான திறன்கள், முக்கியமான மற்றும் வளர்ந்துவரும் சந்தை நிலவரங்கள் ஆகியவற்றை, நிலையற்ற அம்சங்களோடும் சேர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.
நடைமுறைக்கு உதவாத அம்சங்களைக் கொண்ட MBA படிப்பு மற்றும் சந்தை நிலவரங்களிலிருந்து மாறுபட்ட அம்சங்களைக் கொண்ட specialisation ஆகியவற்றை மேற்கொள்வது புத்திசாலித்தனமல்ல. படிப்பின் மூலம் கிடைக்கும் பலன் மற்றும் செலவழிக்கும் பணத்தை திரும்ப எடுக்க முடியுமா? ஆகிய அம்சங்களை மனதில் வைத்தே, ஒரு படிப்பை தேர்வுசெய்ய வேண்டும்.
ஆர்வம் மற்றும் திறன்
நாம் ஏன் MBA படிக்கப் போகிறோம் என்ற கேள்விக்கு விடை காண்பது மிகவும் முக்கியமான தேவையாகும். உங்களுக்கு குழுவோடு இணைந்து பணியாற்ற பிடிக்குமா அல்லது தனியாக செயலாற்ற பிடிக்குமா அல்லது நீடித்த பயணம் மேற்கொள்ள பிடிக்குமா என்பதை ஆராய்ந்து, உங்களின் பலம் மற்றும் பலவீனங்கள் பற்றி மதிப்பிட வேண்டும். உங்களுக்கு எது கச்சிதமாகப் பொருந்துமோ, அதையே தேர்வு செய்தல் வேண்டும்.
MBA மற்றும் PGDM ஆகிய படிப்புகளுக்கு இடையிலான வித்தியாசம் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் உயர்கல்வி(பிஎச்.டி. போன்ற படிப்புகள்) கற்கும் எண்ணத்தைக் கொண்டிருந்தால், MBA படிப்பையே மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், IIM போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் வழங்கும் PGDM படிப்புகள், உயர்கல்விக்கு செல்லும்போது, சர்வதேச அளவில், ஏற்றுக்கொள்ளப்படாமல் போகலாம்.

சி.பி.எஸ்.இ., பள்ளிகள், தமிழக அரசின் விதிமுறைகளில் இருந்தோ, கட்டண நிர்ணய குழு விதி முறைகளில் இருந்தோ தப்ப முடியாது என, கட்டண நிர்ணய குழு வட்டாரம் உறுதியாக தெரிவித்தது.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் கடிவாளத்தை, தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வந்து, சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு வட்டாரம் கூறியதாவது: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திடம் (சி.பி.எஸ்.இ.,) அங்கீகாரம் பெற்ற ஒரே காரணத்தினால், தமிழக அரசிடம் இருந்தோ, தமிழக அரசால் அமைக்கப்பட்டு உள்ள கட்டண நிர்ணய குழுவிடம் இருந்தோ, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் தப்பிவிட முடியாது.
தமிழகத்தில் 500 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளன. அனைத்துப் பள்ளிகளுக்கும், குழு, கட்டணத்தை நிர்ணயிக்கும். இந்த கட்டணத்தை, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் கடைபிடிக்க வேண்டும். 500 மெட்ரிக் பள்ளிகளுக்கு, தற்போது, புதிதாக கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
கட்டணம் நிர்ணய காலம் முடியும் பள்ளிகளுக்கு, தொடர்ந்து, மூன்று கல்வி ஆண்டுகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும். இவ்வாறு குழு வட்டாரம் தெரிவித்தது.