கரூரில் புதிய அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
கட்டுமான தொழிலாளர்களின் நலன், சமூக பாதுகாப்பிற்கு ரூ. 127 கோடியில் திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். கட்டுமான தொழிலாளர்களுக்கு புதிதாக 15 நடமாடும் மருத்துவமனைகள் அமைக்கப்படும். பிற மாநில கட்டுமான தொழிலாளர்களுக்கும் தமிழ்நாடு நல வாரியத்தில் இணைக்கப்படுவார்கள். என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 50க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றும் நிறுவனத்தில் குழந்திகள் காப்பகம் அவசியம் என்றும் பணியின்போது இறக்கும் தொழிலாளருக்கான நிவாரண நிதி ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
கரூரில் புதிய அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும். சென்னை மருத்துவ கல்லூரியில் புதிய விடுதிகள் கட்டப்படும். அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைக்கு பரிசு பெட்டகம் வழங்கப்படும். என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.