உலக நாடுகள் தங்களை வளர்த்து கொள்ள கடனுதவிகளை உலக வங்கி அளித்து வருகிறது. குறிப்பாக ஏழை நாடுகள் தங்களை வளப்படுத்தி கொள்ள நிபந்தனைகளுடன் கூடிய கடன் உதவி திட்டங்களை அளித்து வருகிறது. உலக வங்கி மற்ற வங்கிகளை போல செயல்படுவதில்லை. வணிக நோக்கத்தை தவிர்த்து வறுமையை குறைப்பதையும், வளர்ச்சியை அதிகரிப்பதையும் நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.


உலக நாடுகள் தங்களை வளர்த்து கொள்ள கடனுதவிகளை உலக வங்கி அளித்து வருகிறது. குறிப்பாக ஏழை நாடுகள் தங்களை வளப்படுத்தி கொள்ள நிபந்தனைகளுடன் கூடிய கடன் உதவி திட்டங்களை அளித்து வருகிறது. உலக வங்கி மற்ற வங்கிகளை போல செயல்படுவதில்லை. வணிக நோக்கத்தை தவிர்த்து வறுமையை குறைப்பதையும், வளர்ச்சியை அதிகரிப்பதையும் நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.
* பணிவாய்ப்புகள்:
ஜூனியர் புரொபசனல் அசோசியேட், தொழில் நுட்பவியலாளர்கள், ஒப்பந்த ஆலோசனைதாரர் போன்று பல்வேறு பணிவாய்ப்புகள் உள்ளன. ஒவ்வொரு துறை சார்ந்தும் பணியாளர்கள் பணி செய்கிறார்கள். குறிப்பாக நீர், விவசாயம் மற்றும் கட்டுமான துறை சார்ந்த வல்லுநர்களுக்கு அதிகம் வாய்ப்பிருக்கிறது.
* தேர்ந்தெடுக்கும் முறை:
சில குறிப்பிட்ட பதவிகளுக்கு உலக வங்கி நிறுவனமே தனிப்பட்ட முறையில் ஆட்களை பணி அமர்த்துகிறது. அவை தவிர பெரும்பாலான வேலைகள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் ஆட்களை தேர்வு செய்கிறார்கள். இந்த பணியில் சேர விரும்புவர்கள் அதிகம் பயணம் செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும்.
* ஊதியம்:
நாம் எந்த மாதிரியான ஒப்பந்தத்தில் கையெழுத்து செய்திருக்கிறோமோ அதன்படி ஊதியம் வழங்கப்படும். மேலும், அனுபவம், தகுதி ஆகியவற்றை பொருத்தும் ஊதியம் மாறுபடும். ஒப்பந்த காலத்திற்கு ஏற்றவாறு தினசரி அல்லது மாத சம்பளமாக வழங்கப்படும்.
* தகுதி:
பணிக்கு தகுந்தவாறு தகுதிகள் மாறுபடும். பொதுவான தகுதிகளாக ஆங்கில மொழித்திறன் சிறப்பாக இருக்க வேண்டும். கூடுதலாக அரபிக், சீனம், பிரெஞ்சு, போர்ச்சுகீசிய மொழி, ருஷ்ய மொழி, ஸ்பானிஸ் மொழிகளில் ஏதேனும் தெரிந்திருந்தால் அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.
கல்வித் தகுதியை பொறுத்தவரையில் முதுநிலை பாடத்தில் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுநலம், சுகாதாரம், பொருளாதாரம், உணவு, சமூக அறிவியல் போன்றவற்றை ஆராய்ந்து முடிவுகளை எடுக்க கூடியவராக இருத்தல் வேண்டும். தகவல் பரிமாற்றங்கள் இணையம் வழியாக நடப்பதால் தொழில்நுட்பங்களை திறம்பட கையாள்பவராக இருத்தல் வேண்டும்.
* விண்ணப்பிக்கும் முறை:
உலக வங்கி ஆண்டுதோறும் மிக அதிக அளவு எண்ணிக்கையிலான விண்ணப்பங்களை கையாள்கிறது. எந்த பதவிகளுக்கு விளம்பரம் செய்திருந்தார்களோ அந்த பதவிக்கு மட்டுமே ஆட்களை தேர்வு செய்கிறார்கள். மேலும், உலக உலக வங்கி இணையதளம் மூலமாக அனுப்பப்பட்ட விண்ணப்பங்களை மட்டுமே ஏற்றுக் கொள்கிறார்கள். 

மருத்துவம் படித்தவராக இருந்தாலும் சரி. படிக்காதவராக இருந்தாலும் சரி. சேவை மனப்பான்மை உள்ளவர்கள் தாராளமாய் மேற்கொள்ள கூடிய படிப்பு முதுநிலை பொதுசுகாதார ( பப்ளிக் ஹெல்த்) படிப்பு.


சில ஆண்டுகள் கிளினிக்கில் துறையில் பணிபுரிந்து விட்டு, அதே துறையில் நிர்வாகம் மற்றும் மேலாண்மை பணிகளில் செல்ல விரும்புவோருக்கு முதுநிலை பப்ளிக் ஹெல்த் படிப்பு துணை புரிகிறது. வெறும் கிளினிக்கல் பயிற்சிகளில் மட்டுமே திருப்தியடையாமல், நிர்வாக பணிகளிலும் ஆர்வம் உள்ள நபர்களுக்கு இந்த படிப்பு ஒரு நல்ல வடிகால்.

சில கல்வி நிறுவனங்களில், இந்த படிப்பில் ( மாஸ்டர்ஸ் இன் பப்ளிக் ஹெல்த் - எம்பிஎச்) மருத்துவம் சாராத நபர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. இது ஒரு மேலாண்மை சார்ந்த படிப்பாக இருப்பதால், பொதுத்துறையில் எப்படி சிறப்பாக பணிபுரிவது என்பதை கற்றுக் கொள்ள முடியும்.

* வரும்முன் காப்போம் கருத்தாக்கம்:

ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை விட, மனிதனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று எதுவுமில்லை. பப்ளிக் ஹெல்த் என்பது கல்வி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கற்றுக் கொடுப்பது மற்றும் நோய்களை தடுப்பது ஆகிய நடைமுறைகளின் வழியாக ஒரு சமூகத்தின் சுகவாழ்வை உறுதி செய்யும் ஒரு அறிவியலாகும்.

இப்படிப்பில் ஒரு மாணவர்,சமூகத்தை எவ்வாறு அணுகி, அதன் சுகாதார அம்சங்களை ஆராய்ந்து விஷயங்களை அறிந்து கொண்டு சுகாதார சிக்கல்களை எவ்வாறு தீர்ப்பது என்பதை பற்றி கற்றுத் தரப்படும்.

* பப்ளிக் ஹெல்த் மற்றும் மருத்துவமனை நிர்வாகம்:

மருத்துவமனை மேலாண்மை மற்றும் நிர்வாகம் ஆகிய 2 விஷயங்களில் இருந்தும் முதுநிலை பப்ளிக் ஹெல்த் படிப்பு என்பது வேறுபட்டதாகும்.

மெடிக்கல் சயின்ஸ் மற்றும் துணைநிலை மெடிக்கல் சயின்ஸ் படித்த மாணவர்களுக்கு, முதுநிலை மருத்துவ மனை நிர்வாகப் படிப்பு ஏற்றது. மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளில் பணிபுரிய விரும்பும் நபர்கள் இப்படிப்புகளை மேற்கொள்கிறார்கள். இப்படிப்பு மருத்துவமனை இயக்கம் தொடர்பானது.

அதேசமயம், ஹாஸ்பிடல் மேலாண்மை படிப்பானது, நிதி, இயக்கம், பணியமர்த்தல் உள்ளிட்ட மருத்துவமனை மேலாண்மை தொடர்பான பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. இது ஒரு எம்.பி.ஏ., படிப்பை போன்றது. அனைத்து பிரிவு பட்டதாரிகளும் இதில் சேரலாம்.

* எம்பிஎச் படிப்பின் அவசியம்:

மருத்துவ சேவை அமைப்புகள் பலவிதமான மாற்றங்களுக்கு உட்பட்டு வருகின்றன. சுகாதார மேம்பாடு மற்றும் நோய் தடுப்பு உள்ளிட்ட அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, மருத்துவ செலவை குறைத்து ஆரோக்கிய வாழ்வில் கவனம் செலுத்தப்படுகிறது.

இத்துறை நிபுணர்களின் தேவை இன்று மிகவும் அதிகளவில் உள்ளது மற்றும் இதனால் பப்ளிக் ஹெல்த் படிப்புகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. மாஸ்டர்ஸ் இன் பப்ளிக் ஹெல்த் பட்டதாரிகள் பல்வேறு அரசு நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள்.

* பாடத்திட்டம்:

இப்படிப்பின் முதல் வருடத்தில் மாணவர்கள் எம்.பி.ஏ தொடர்புடைய அம்சங்களை படிக்கிறார்கள். ஆனால், இரண்டாமாண்டில், ஸ்பெஷலைசேஷன் நிலைக்கு வருகிறார்கள். மருத்துவம், துணை மருத்துவம் மற்றும் பாராமெடிக்கல் பிரிவுகளில் இருந்து வருபவர்களுக்கு கூடுதல் பலன்கள் உண்டு. ஏனெனில், இப்படிப்பு பப்ளிக் ஹெல்த் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் தொடர்பானதாகும்.

* பணி வாய்ப்புகள்:

இப்படிப்பு பலவிதமான பணிவாய்ப்புகளை வழங்குகிறது. அரசு துறைகள், அரசு சாரா துறைகள், என்.ஜி.ஓக்கள், திட்ட கமிஷன், சுகாதார மற்றும் குடிநீர் துறை, டபிள்யூஎச்ஓ, யுனிசெப், யுஎன்பிஏ, யுஎன்டிபி, தனியார் மருத்துவமனைகள் மற்றும் பார்மசூடிகல் நிறுவனங்கள் ஆகிய பல்வேறு அமைப்புகளில் திட்ட ஒருங்கிணைப்பாளர், அனலிஸ்ட், கன்சல்டன்ட், ஆராய்ச்சியாளர்கள், முன்னறிவிப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணிக்கு சேரலாம்.

* படிப்பின் அம்சங்கள்:

எவால்யூசன் ஆப் பப்ளிக் ஹெல்த், எபிடெமியாலஜி, ஹெல்த் எகனாமிக்ஸ், பிரிவென்சன் ஆப் டிசீஸ் மற்றும் டிசபிலீட்டிஸ், ஹெல்த் எஜுகேஷன் அன்ட் அவேர்னஸ், உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாகும்.

கழிவறைகள் இல்லாத பள்ளிகளுக்கு ஆடுத்த கல்வி ஆண்டு முதல் தகுதி சான்றிதழ் வழங்கப்படாது என்று கேரளா அரசு அறிவித்துள்ளது.


கழிவறைகள் இல்லாத பள்ளிகளுக்கு ஆடுத்த கல்வி ஆண்டு முதல் தகுதி சான்றிதழ் வழங்கப்படாது என்று கேரளா அரசு அறிவித்துள்ளது.

கேரளா மாநில அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் அம்மாநில முதல்-மந்திரி உம்மன் சாண்டி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசுகையில், பள்ளிகளில் கட்டாய கழிப்பறை வசதியை செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பள்ளியின் கட்டங்களின் பாதுகாப்பை அறிந்து இதுவரையில் பள்ளிகளுக்கு சான்றிதழ் அளிக்கப்படுகிறது. ஆனால், அடுத்த கல்வி ஆண்டு முதல் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படும். கழிவறை வசதியும் அதில் கட்டாயமாக்கப்படும். இத்தகையை வசதிகள் இல்லாத பள்ளிகளில் அடுத்து கல்வி ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்படாது. இதுவரையில் 196 அரசு பள்ளிகளில் கழிவறைகள் இல்லை. அடுத்த 100 நாட்களில் அத்தகைய வசதிகள் செய்து கொடுக்கப்படும். 

இதேபோல் மாநிலத்தில் 1011 அரசு உதவிபெறும் பள்ளிகளில் கழிவறை வசதி இல்லை. அடுத்த கல்வி ஆண்டுக்குள் அரசு உதவிபெறும் பள்ளிகளும் கழிவறை வசதிகளை சொந்த செலவில் செய்ய பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. என்றார்.

8 என்ற எண்ணை 8 முறை பயண்படுத்தி 1000 கொண்டுவரவும். + , - , / போன்ற எல்லா வித கணித குறிகளையும் பயண்படுத்தலாம்

 1).     888 + 88 + 8 + 8 + 8 =1000  
2).    (8(8(8+8)-(8+8)/8))-8 =1000
3).    (888-8) + 8×(8+8) - 8=1000
4).    ((8×(8+8))-((8+8+8)/8))*8=1000
5).    (8+((8+8)/8))^((8+8+8)/8)=1000
6).    (8+((8+8)/8))^((88/8)-8)=1000
7).    ((8×(8+8))-((88/8)-8))×8=1000
8).    (8888-888)/8=1000
9).    8888/8.888 =1000
10).  8(8×8+8×8)-8-8-8=1000