தமிழகத்தில் பயிற்சி முடித்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் 8 பேர், உதவி போலீஸ் சூப்பிரண்டுகளாக பணி நியமனம் செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் பயிற்சி முடித்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் 8 பேர், உதவி போலீஸ் சூப்பிரண்டுகளாக பணி நியமனம் செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி உதவி சூப்பிரண்டு
* நெல்லையில் பயிற்சி முடித்த அருண் சக்திகுமார், தூத்துக்குடி டவுண் உதவி போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* மதுரையில் பயிற்சியை நிறைவு செய்த தேஷ்முக்சேகர் சஞ்சய், தர்மபுரி மாவட்டம் அரூர் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.
* திருச்சியில் பயிற்சியை முடித்துள்ள ஜார்ஜி ஜார்ஜ், காஞ்சீபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தஞ்சையில் பயிற்சி பெற்ற ஓம்பிரகாஷ் மீனா, மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் உதவி சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.
ரோகிணி பிரியதர்ஷினி
* சிவகங்கையில் பயிற்சியை முடித்துள்ள ரோகிணி பிரியதர்ஷினி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* காஞ்சீபுரத்தில் பயிற்சி பெற்ற விக்ரந்த் பட்டீல், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை உதவி சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
* நாகப்பட்டினத்தில் பயிற்சி பெற்றுள்ள தீபாகனீகர், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை உதவி சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* திண்டுக்கல்லில் பயிற்சியை முடித்துள்ள சஷாங்க்சாய், நாகப்பட்டினம் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.
இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கூடுதல் பேராசிரியர்கள் 29 பேர் கல்லூரி முதல்வர் கிரேடு–2 நிலைக்கு பதவி உயர்வு பெற்று செல்கிறார்கள்.


அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கூடுதல் பேராசிரியர்கள் 29 பேர் கல்லூரி முதல்வர் கிரேடு–2 நிலைக்கு பதவி உயர்வு பெற்று செல்கிறார்கள். அவர்கள் பெயர்களும், பதவி ஏற்க உள்ள அரசு கல்லூரிகள் உள்ள ஊர்களின் விவரமும் வருமாறு:–
1. எஸ்.லீலாவதி–பரமக்குடி, 2. வி.பிரபாகரன்–மேலூர், 3. கே.சுந்தரவல்லி–கொமரப்பாளையம், 4. சி.வடிவேலு –முதுகுளத்தூர், 5. உஷாயலயராஜ்–வேலூர், 6. ஏ.ஜோசப் துரை–ராமநாதபுரம், 7. எல்.ஞானசேகரன்–கரம்பக்குடி, 8. எஸ்.சசிகலா–சென்னை வியாசர்பாடி, 9. ஆர்.பாண்டியன்–கோவில்பட்டி, 10. எஸ்.சுரேஷ்–சிவகாசி. 11. தாராபாய் தாட்சாயணி–ராமநாதபுரம் பெண்கள் கல்லூரி, 12. எஸ்.எஸ்.ரத்தினகுமார்–கடலாடி, 13. ஆர்.முர்த்தி–உத்திரமேரூர், 14. எம்.எம்.செந்தமிழ்ச்செல்வி–குளித்தலை, 15. கே.கூடலிங்கம்–முசிறி, 16. அமுதா ராணி–பூலாங்குறிச்சி, 17. ஜி.வணங்காமுடி–சிதம்பரம், 18. என்.ராஜ சுலோசனா–ஆத்தூர், 19. ஏ.சுப்பையா பாண்டி–புதுக்கோட்டை, 20. டி.ஆர்.கணேசன்–ராசிபுரம், 21. கே.சண்முக சுந்தரம்–காங்கேயம், 22. கே.சித்ரா–சுரண்டை, 23. என்.ராமகிருஷ்ணன்–கோவை, 24. எல்.பிரதாபன்–பர்கூர், 25. ஆர்.நடராஜன்–காரிமங்கலம், 26. பெர்னிஸ் பென்னட்– நிலக்கோட்டை, 27. எம்.லதா–திருவாடாணை, 28. வி.ராதா–நாமக்கல், 29. எம்.ஆர்.ஜெயசக்தி–கிருஷ்ணகிரி.இந்த தகவலை உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் ஹேமந்த் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ரூ.103 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக்கூட கட்டிடங்களை முதல் அமைச்சர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.


பள்ளி கல்வி மேம்பாட்டிற்காக, குறிப்பாக ஏழை எளிய மாணவ, மாணவியர் இடை நிற்காது தொடர்ந்து கல்வி கற்கும் வகையில் கட்டணம் இல்லா கல்வி, சத்தான உணவு, விலையில்லா சீருடைகள், மடிக்கணினிகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், புத்தகப் பை, காலணிகள், கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள், மிதிவண்டிகள், ஊக்கத் தொகை, பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற எண்ணற்ற திட்டங்களை முதல் அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 30 கணினிகள், பிரிண்டர்கள், நகல் எந்திரம், எல்.சி.டி. புரஜக்டர் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஆங்கில மொழி ஆய்வகம் மற்றும் பயிற்சி மையத்தை ஜெயலலிதா நேற்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
ரூ.103 கோடியில்பள்ளிக்கூட கட்டிடங்கள்
மேலும், 22 மாவட்டங்களில் அமைந்துள்ள 76 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 81 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள், ஆய்வுக் கூடங்கள், சுற்றுச் சுவர், குடிநீர் வசதி; அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டம், தரகம்பட்டி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் போடிச்சம்பள்ளியில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாதிரி பள்ளிக் கட்டிடம்; அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் அமைந்துள்ள 186 அரசுப் பள்ளிகளில் 15 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 276 கூடுதல் வகுப்பறைகள்; காஞ்சீபுரம் மாவட்டம் - சிட்லபாக்கம் ஒன்றியம்; புதுக்கோட்டை மாவட்டம் - மணமேல்குடி ஒன்றியம்; நாமக்கல் மாவட்டம் - எருமைப்பட்டி ஒன்றியம் ஆகிய இடங்களில் தலா 20 லட்சம் ரூபாய் வீதம் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலகக் கட்டிடங்கள்; வேலூர் மாவட்டம் - வேலூரில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு தேர்வுத் துறையின் மண்டல அலுவலகக் கட்டிடம்; என மொத்தம் 103 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டிடங்களை ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.