கரூரில் புதிய அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


கரூரில் புதிய அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
கட்டுமான தொழிலாளர்களின் நலன், சமூக பாதுகாப்பிற்கு ரூ. 127 கோடியில் திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். கட்டுமான தொழிலாளர்களுக்கு புதிதாக 15 நடமாடும் மருத்துவமனைகள் அமைக்கப்படும். பிற மாநில கட்டுமான தொழிலாளர்களுக்கும் தமிழ்நாடு நல வாரியத்தில் இணைக்கப்படுவார்கள். என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 50க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றும் நிறுவனத்தில் குழந்திகள் காப்பகம் அவசியம் என்றும் பணியின்போது இறக்கும் தொழிலாளருக்கான நிவாரண நிதி ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
கரூரில் புதிய அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும். சென்னை மருத்துவ கல்லூரியில் புதிய விடுதிகள் கட்டப்படும். அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைக்கு பரிசு பெட்டகம் வழங்கப்படும். என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம் மற்றும் பி.எஸ்சி., ரேடியோலஜி மற்றும் இமேஜிங் உள்ளிட்ட பாராமெடிக்கல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம் மற்றும் பி.எஸ்சி., ரேடியோலஜி மற்றும் இமேஜிங் உள்ளிட்ட பாராமெடிக்கல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஆகஸ்ட் 18ம் தேதி, காலை 10 மணிக்கு கவுன்சிலிங் தொடங்குகிறது. அன்றைய தினம், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ராணுவ வீரர் பிள்ளைகளுக்கான கவுன்சிலிங் நடக்கிறது.ஆகஸ்ட் 19ம் தேதி முதல், இதரப் பிரிவினருக்கான கவுன்சிலங் தொடங்குகிறது. முதல் நாளில் கட்-ஆப் மதிப்பெண் 199.00 இலிருந்து துவங்குகிறது. தொடர்ச்சியாக 23ம் தேதி வரை நடைபெறும் கவுன்சிலிங், ஞாயிறு விடுமுறையைக் கடந்து, 25ம் தேதி திங்கட்கிழமை துவங்குகிறது.இறுதியாக, 27ம் தேதி புதன்கிழமையுடன் றிறைவு பெறுகிறது. இறுதி கட்-ஆப் மதிப்பெண் 148.50. சென்னை, கீழ்ப்பாக்கத்திலுள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்தின் ஆடிட்டோரியத்தில் இந்த கவுன்சிலிங் நடைபெறுகிறது.
இதுகுறித்து அனைத்து வழிகாட்டுதல்கள் மற்றும் விபரங்களை அறிய http://www.tnhealth.org/notification/August2014/CSCHEPMC1415.pdf என்ற வலைதளம் செல்க.

இளநிலை, முதுநிலை அல்லது ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் திட்டத்தை மத்திய மனிதவள அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இளநிலை, முதுநிலை அல்லது ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் திட்டத்தை மத்திய மனிதவள அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு அல்லது வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில், இளநிலைப் பட்டப்படிப்பு அல்லது முதுநிலைப் பட்டப் படிப்பு அல்லது ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் இந்திய மாணவர்களுக்கு, பல்வேறு அரசுத் துறைகளில் இன்டர்ன்ஷிப் மேற்கொள்வதற்கான திட்டத்தை மத்திய மனிதவள அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த திட்டத்திற்கு MHRD Internship Scheme - 2014 என்று பெயர். கல்வி, சமூக அறிவியல், அறிவியல், மானுடவியல், மேலாண்மை, பொறியியல் மற்றும் சட்டம் உள்ளிட்ட துறைகளில் இளநிலை அல்லது முதுநிலை அல்லது ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொண்டு வருவோர், இதற்கு விண்ணப்பிக்கலாம்.இந்த இன்டர்ன்ஷிப் திட்டத்தின் முதல் batch, வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. முதல் batch -ல், வெறும் 6 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர்.இத்திட்டத்தில் பங்கேற்பவர்கள், மனிதவள அமைச்சகத்துடன் 2 மாதங்கள், நெருங்கி பணியாற்றும் வாய்ப்பினை பெறுகிறார்கள் மற்றும் அந்த காலகட்டத்தில், அவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகையும் வழங்கப்படும்.