இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் ( ICAR ) உயர் கல்வி படிப்பு

டெல்லியில் தலமையகத்தை கொண்ட, மத்திய அரசின் வேளாண் அமைச்சகதின் கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி பெற்ற அமைப்பு இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில். உயர் அதிகாரம் படைத்த இந்த ஆய்வுக் குழுமம், 1929-ம் ஆண்டு சமூகப் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு செயல்படத் தொடங்கியது. தற்போது இந்த ஆய்வு குழுமம் வேளாண் ஆராய்ச்சிக்கு முக்கியதுவம் அளித்து வருகிறது. மத்திய  வேளாண் துறை அமைச்சர் இதன் தலைவராக செயல்படுகிறார். நாடு முழுவதும் 49 வேளாண் ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள், 4 நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் 17 தேசிய ஆராய்ச்சி மையங்களும் செயல்பட்டு வருகின்றது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ்  செயல்பட்டு வரும் இந்த நிறுவனங்களில் அகில இந்திய அளவிலான 15 சதவீத இடங்களை நிரப்புவதற்கான  அகில இந்திய வேளாண் துறை நுழைவுத் தேர்வை  இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் நடத்துகிறது. மேலும் விவரங்களை அறிய www.icar.org.in  என்ற இணையதளத்தில் காணலாம்.