தமிழகத்தில், டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இம்மாதம் 15ம் தேதி தொடங்கும் என, மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் 23 அரசு நர்சிங் கல்லூரிகள் உள்ளன. இதில், டிப்ளமோ நர்சிங் இரண்டாண்டு படிப்புக்கு 2,000 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 8,101 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தர வரிசைப் பட்டியல் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 15ம் தேதி தொடங்குகிறது. அன்று, மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது.தொடர்ந்து 18ம் தேதி வரை, பிற பிரிவுகளுக்கான கலந்தாய்வும் நடக்க உள்ளது. மேலும் விவரங்கள் தேவைப்படுவோர், tn.health.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.