டி.இ.டி. தேர்வில் தேர்ச்சி பெற்ற சீர்மரபினர், இடைநிலை ஆசிரியர்கள், உரிய சாதி சான்றிதழ்களை சமர்பிக்க ஆகஸ்ட் 12ம் தேதி (இன்று) கடைசி நாள் என டி.ஆர்.பி. தெரிவித்துள்ளது.

டி.இ.டி. தேர்வில் தேர்ச்சி பெற்ற சீர்மரபினர், இடைநிலை ஆசிரியர்கள், உரிய சாதி சான்றிதழ்களை சமர்பிக்க ஆகஸ்ட் 12ம் தேதி (இன்று) கடைசி நாள் என டி.ஆர்.பி. தெரிவித்துள்ளது.கள்ளர் சீரமைப்பு துறையில் பல ஆண்டுகளாக காலியாக உள்ள இடைநிலைஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, டி.இ.டி.தேர்வில் தாள் -1 ல் தேர்ச்சி பெற்ற மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த சீர்மரபினர் பிரிவில் உள்ள இந்து பிரமலைக் கள்ளர் வகுப்பை சேர்ந்தவர்கள் மதுரையில் உள்ள ஓ.சி.பி.எம். பள்ளியில் உரிய சான்றிதழ்களுடன் நேரில் ஆஜராகி, சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.நேற்று துவங்கிய சான்றிதழ் சரி பார்ப்பு பணி இன்றுடன் (ஆக. 12) முடிவடைகிறது. உரிய சாதி சான்றிதழை சமர்பிக்காதவர்கள் இப் பிரிவின் கீழ் பணிநியமனம் செய்யப்பட மாட்டார்கள் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

பொதுத் துறை நிறுவனமான என்.எல்.சி.,-ல் இள நிலை இன்ஜினியரிங் பயிற்சியாளர்கள் பிரிவில் காலியாக உள்ள 157 காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


எரிசக்தி துறையில் பிரபலமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் என்.எல்.சி., என்ற பெயரால் நம்மால் அறியப்படுகிறது. பொதுத் துறை நிறுவனமான என்.எல்.சி., தமிழகத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்த நிறுவனத்தில் இள நிலை இன்ஜினியரிங் பயிற்சியாளர்கள் பிரிவில் காலியாக உள்ள 157 காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: 01.08.2014 அடிப்படையில் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: மைனிங் அல்லது மைனிங் அண்டு சர்வேயிங் பிரிவில் 3 வருட டிப்ளமோ படிப்பை குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ரூ.300/-ஐ ஆன்-லைன் முறையில் கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 02.09.2014
இணையதள முகவரி: www.nlcindia.com





அரசு பள்ளிகளில், புதிதாக நியமிக்கப் பட உள்ள ஆசிரியர்களில், தமிழ் பாடத்திற்கான ஆசிரியர் எண்ணிக்கை, மிகவும் குறைவு. வெறும், 772 இடங்கள் மட்டுமே, தமிழ் பாடத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

அரசு பள்ளிகளில், புதிதாக நியமிக்கப் பட உள்ள ஆசிரியர்களில், தமிழ் பாடத்திற்கான ஆசிரியர் எண்ணிக்கை, மிகவும் குறைவு. வெறும், 772 இடங்கள் மட்டுமே, தமிழ் பாடத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 'பாட வாரியான பணி நியமன வரிசையில், தமிழை, நான்காவது இடத்தில் வைத்திருப்பது தான், இதற்கு காரணம்' என, தமிழ் ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பட்டதாரி ஆசிரியர் தேர்வில், பணி நியமனத்திற்கு தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை, நேற்று முன்தினம், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. 10,726 பணியிடங்கள் ஒதுக்கிஉள்ள போதும், தமிழ் பாடத்திற்கு, 772 பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளன.
தமிழ் பாடத்திற்கு, குறைவான இடங்கள் ஒதுக்கீடு செய்தது குறித்து, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம் கூறியதாவது:காலி பணியிடங்களில், 50 சதவீதத்தை, பதவி உயர்வு மூலமும், 50 சதவீதத்தை, நேரடி பணி நியமனம் மூலமும், கல்வித் துறை நிரப்புகிறது.இதில், தமிழ் பாடத்திற்கு மட்டும், 66.6 சதவீத இடங்கள், பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. 33.3 சதவீத இடங்கள் மட்டுமே, நேரடியாக நியமிக்கப்படுகின்றன. இந்த முறையினால் தான், தமிழ் பாடத்திற்கு, இடங்கள் குறைவாக வருகின்றன.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.