இந்திய ராணுவத்தின் பல் மருத்துவ பிரிவில் காலியாக உள்ள 37 டாக்டர்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்திய ராணுவத்தின் பல் மருத்துவ பிரிவில் காலியாக உள்ள 37 டாக்டர்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி:Short Service Commissioned (SSC) Officer: 37 இடங்கள்.
தகுதி:
இறுதி வருடத்தில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் பிடிஎஸ்/ எம்டிஎஸ் முடித்திருக்க வேண்டும். இந்திய பல் மருத்துவ கவுன்சில் அங்கீகரித்த மருத்துவமனையில் ஒரு வருடம் மருத்துவமனையில் தங்கியிருந்து துணை மருத்துவராக பணியாற்றியிருக்க வேண்டும். 31.12.2014 தேதி வரையில் செல்லுபடியாகும் வகையிலான நிரந்தர பல் மருத்துவ பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ராணுவத்தில் பணியாற்றுவதற்கான தகுந்த மருத்துவ தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு; 31.12.2014 தேதிப்படி 45க்குள்.
சம்பள விகிதம்:
ரூ.15,600 - 39,100, தர ஊதியம் ரூ.6,100 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.
விண்ணப்பங்களின் பரிசீலனைக்கு பின் பல் மருத்துவ படிப்பின் இறுதி வருட மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்ப கட்டணம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
Director General Armed Forces Medical Services, (DGAFMS/DENTAL2),Room No.25, 'L' Block,
Ministry of Defence,
NEWDELHI 110001.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.8.2014.
கடந்த ஜூனில் நடந்த பிளஸ் 2 உடனடித் தேர்வில் பங்கேற்ற தனித் தேர்வர்களுக்கு, ’சாப்ட்வேர்’ பிரச்னையால், இதுவரை முடிவுகள் வெளியிடாததால் உயர் கல்விக்கு செல்ல முடியாமல் தவிப்பில் உள்ளனர்.
கடந்த ஜூனில் நடந்த பிளஸ் 2 உடனடித் தேர்வில் பங்கேற்ற தனித் தேர்வர்களுக்கு, ’சாப்ட்வேர்’ பிரச்னையால், இதுவரை முடிவுகள் வெளியிடாததால் உயர் கல்விக்கு செல்ல முடியாமல் தவிப்பில் உள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச்சில் நடந்தது. இதற்கான முடிவுகள் வெளியான பின், ஜூனில் உடனடி மறுதேர்வு நடந்தது. இதில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அடுத்த மாதமே இவர்களுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மதிப்பெண் பட்டியல்களும் வழங்கப்பட்டன. ஆனால் 7 ஆயிரம் பேருக்கு இதுவரை முடிவுகள் வெளியாகவில்லை.
முடிவுகள் தாமதமானதும் பலர் தேர்வுத் துறையிடம் விளக்கம் கேட்டனர். ஆயிரம் பேருக்கு மட்டும் அதிகாரிகள் முடிவுகளை வெளியிட்டனர். ஆனால், மற்றவர்களுக்கான முடிவுகள் தெரியாத நிலையில் அவர்கள் கல்லூரிகளில் சேர முடியாத நிலையுள்ளது. சேர்க்கை முடிந்தநிலையில், ஓராண்டு படிப்பு வீணாகிவிட்டதாக புலம்புகின்றனர்.
கல்வித்துறையினர் கூறுகையில், ‘இந்தாண்டு விடைத்தாள் திருத்தும் பணிக்காக, ’பார்கோடு’ முறை அமல்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் ’சாப்ட்வேர்’ பிரச்னையால் முடிவுகள் அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது,‘ என்றனர்.
Subscribe to:
Posts (Atom)