எம்.இ, எம்.டெக்., உள்ளிட்ட முதுகலைத் தொழில்படிப்புகள் படிக்கும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கபடுகிறது. எம்.இ, எம்.டெக், படிப்புகளுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரமும்,இதர படிப்புகளுக்கு ரூ.3 ஆயிரமும் கிடைக்கும். மேலும் அவசர நிதி உதவியாக பொறியியல் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரமும், இதர படிப்புகளுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகைத் திட்டத்தின் வயது வரம்பு ஆண்களுக்கு 45, பெண்களுக்கு 50. ஆண்டுதோறும் 1000 எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு இந்த உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கப்படுகிறது.நடப்பு நிதி ஆண்டுக்கான(2014-2015) கல்வி உதவித் தொகையைப் பெறுவதற்க்கு ஆகஸ்டு 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த உதவித் தொகைகளைப் பெறுவதற்கு யூ.ஜி.சி (UGC) யின் இணையதளத்தில் (www.ugc.ac.in) ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.