தமிழக அரசு அனுமதியின்றி, பிசியோதெரபி டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு நடத்தப்படுவதை தடைசெய்ய வேண்டும் என, தமிழ்நாடு இயன்முறை மருத்துவர்கள் பெருமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.மன்ற நிர்வாகிகள், பிசியோதெரபி தினத்தையொட்டி (செப்., 8), 29 கலெக்டர் அலுவலகங்களிலும், முதல்வர் அலுவலகத்திலும், கோரிக்கை மனு கொடுத்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது: மாநில பிசியோதெரபி கவுன்சில் அமைக்க வேண்டும். தமிழக அரசு அனுமதி இல்லாமல், பிசியோதெரபி டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள், பல்வேறு கல்வி நிறுவனங்கள் மூலம் நடத்தப்படுகின்றன; இதை தடை செய்ய வேண்டும்.மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை உட்பட அனைத்து அரசு மருத்துவமனைகளில், ஏற்கனவே உள்ள பிசியோதெரபிஸ்ட் பணியிடங்களுடன், பெருகி வரும் நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
புதிய ஆசிரியர் பணியில் சேர்வதில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு இந்த வார இறுதிக்குள் தீர்வு கிடைத்துவிடும் என கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது
புதிய ஆசிரியர் பணியில் சேர்வதில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு இந்த வார இறுதிக்குள் தீர்வு கிடைத்துவிடும் என கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறைக்கு தேர்வு பெற்ற 14,700 பேரை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு கடந்த வாரம் நடந்தது. இதில் 100 பேர் வரை ஆப்சென்ட் ஆனதாக தெரிய வந்துள்ளது.இது குறித்து கல்வித்துறை வட்டாரம் நேற்று கூறுகையில், "ஆப்சென்ட் ஆனதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சம்பந்தபட்டவர்கள் ஆப்சென்ட் ஆனதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். அவர்கள் அனைவரும் பணியில் சேர வாய்ப்பு அளிக்கப்படும்" என தெரிவித்தது.இதற்கிடையே வெயிட்டேஜ் மதிப்பெண் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை, புதிய ஆசிரியர் பணியில் சேர இடைக்கால தடை விதித்தது.இந்த விவகாரத்தில் தமிழக அரசு மதுரை நீதிமன்றத்தில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரச்னையில் இந்த வார இறுதிக்குள் தீர்வு கிடைத்து விடும் எனவும் கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.
1,047 காலி பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட குரூப்–2 முதல் நிலை தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வு–2–ல்(குரூப்–2) துணை வணிகவரி அலுவலர், சார்பதிவாளர் நிலை–2, தொழிலாளர் உதவி ஆய்வாளர், நிதித்துறையில் உதவிப்பிரிவு அலுவலர், சட்டத்துறையில் உதவிப்பிரிவு அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள 19 பதவிகளுக்கான 1,047 பணியிடங்களுக்காக, கடந்த ஆண்டு டிசம்பர் 1–ந் தேதி தேர்வு நடந்தது.
இந்த தேர்வு தமிழகம் முழுவதும் 114 நகரங்களில், 2 ஆயிரத்து 269 தேர்வு மையங்களில் நடந்தது. 4 லட்சத்து 98 ஆயிரத்து 471 பட்டதாரிகள் தேர்வு எழுதினர். முதல் நிலை தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதில், 11,497 பேர் தேர்ச்சி பெற்று, அடுத்தக்கட்ட முதன்மை தேர்வுக்கு தேர்வாகி உள்ளனர். அவர்களின் விவரம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
குரூப்–2–ல் காலியாக உள்ள 19 பதவிகளுக்கான 1,047 காலி பணியிடங்களுக்கான முதல் நிலை எழுத்து தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 1–ந் தேதி நடந்தது. தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் முதன்மை எழுத்து தேர்விற்கு தேர்வு செய்யப்பட்ட 11,497 விண்ணப்பதாரர்களின் பதிபெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைவளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதன்மை எழுத்து தேர்வு நவம்பர் 8–ந் தேதி காலை மற்றும் மதியம் நடைபெறும்.
நவம்பர் மாதம் 8–ந் தேதி நடக்கும் முதன்மை தேர்வில் வெற்றி பெறுகிறவர்கள், அடுத்தபடியாக நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசு பணிகள் வழங்கப்படும்.
Subscribe to:
Posts (Atom)