நாட்டின் சிறந்த பள்ளிகள் வரிசையில் முதலிடம் பெற்ற மத்திய அரசுப் பள்ளிகள்!

  ற்றுள்ளது. ஒரு சர்வேயின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இதேபோன்று, தமிழகத்தின் இதர 10 பள்ளிகள், பல்வேறு பிரிவுகளில், முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.முதல் 10 சிறந்த பள்ளிகளின் வரிசையில், முதல் 7 இடங்களில் அரசுப் பள்ளிகள் வருகின்றன. அதில் முதலிடத்தை சென்னை ஐ.ஐ.டி. வளாகத்திலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி பெற்றுள்ளது. மொத்தப் புள்ளிகளான 1500க்கு, இப்பள்ளி 981 புள்ளிகளைப் பெற்றுள்ளது.977 புள்ளிகளைப் பெற்று, டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை வளாகத்திலுள்ள கேந்திரிய வித்யாலயா என்.எம்.ஆர். பள்ளி, இரண்டாமிடத்தில் உள்ளது. மூன்றாமிடத்தில், டில்லியிலுள்ள ராஜகிய பிரதீபா விகாஸ் வித்யாலயா பள்ளி பெற்றுள்ளது. இதற்கான புள்ளிகள் 951.நான்காம் இடத்தை 946 புள்ளிகளுடன், கொல்கத்தாவின் ஜாதவ்பூர் வித்யாபீட் பள்ளியும், ஐந்தாமிடத்தை 927 புள்ளிகளுடன், ஐ.ஐ.டி. கான்பூர் வளாகத்திலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியும் பெற்றுள்ளன.C-Fore என்ற நிறுவனத்தின் மூலம், டில்லி, சென்னை, பெங்களூர், ஐதராபாத், லக்னோ, மும்பை, கான்பூர், போபால், கொல்கத்தா மற்றும் கொச்சி ஆகிய நகரங்களில், 1000க்கும் மேற்பட்ட, கட்டணம் செலுத்தும் மற்றும் கட்டணம் செலுத்தாத, பல்வேறு சமூக நிலைகளைச் சேர்ந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோரிடம் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது. கடந்த மே மற்றும் ஜுலை மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த சர்வேயின் முடிவுகள், தற்போது வெளியிடப்பட்டுள்ளன.ஆசிரியர் நலம் மற்றும் மேம்பாடு, ஆசிரியர்களின் திறமை, விளையாட்டுக் கல்வி, சிறப்புத் தேவைகளுக்கான கல்வி, திறன்சார் நடவடிக்கைகள் சார்ந்த கல்வி, உள்கட்டமைப்பு, அகடமிக் சார்ந்த நற்பெயர், செலுத்தும் பணத்திற்கான மதிப்பு, ஒவ்வொரு மாணவர் மீதான தனிப்பட்ட கவனிப்பு, தலைமைத்துவ தரம், பெற்றோரை ஒத்த அக்கறை, சர்வதேச தரம், சமூக சேவை, வாழ்க்கைத் திறன் கல்வி மற்றும் சச்சரவு மேலாண்மை ஆகிய பலதரப்பட்ட அம்சங்களின் அடிப்படையில், பங்கேற்பாளர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டதாகும் இந்த சர்வே. ஆசிரியர் தரம் தொடர்பான விஷயத்திற்கு மட்டும் இரட்டை வெயிட்டேஜ் மதிப்பெண் தரப்பட்டது.பல பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பினாலும், அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு கடும் போட்டியைத் தருபவையாக உள்ளன. அரசுப் பள்ளிகள், தங்களின் தரத்தை சிறிதுசிறிதாக உயர்த்தி வருகின்றன என்று கல்வியாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.தமிழகத்தைப் பொறுத்தவரை, 80% அரசுப் பள்ளிகள், தங்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், அத்தியாவசிய நடைமுறைகளைப் பின்பற்றுகின்றன என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.மத்திய மனிதவள அமைச்சகத்தின் கணக்குப்படி, மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களால், நாட்டில் மொத்தம் 2 லட்சம் பள்ளிகள் வரை நடத்தப்படுகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.

அரசு பள்ளிகளில், சேதமடைந்த கட்டடங்களில் வகுப்புகளை நடத்த வேண்டாம்

வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, அரசு பள்ளிகளில், சேதமடைந்த கட்டடங்களில் வகுப்புகளை நடத்த வேண்டாம் என, பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.பல்வேறு பகுதிகளில் அரசு பள்ளி கட்டட மேற்கூரை பெயர்ந்து, சுவர்களில் கீறல் விழுந்து பராமரிப்பின்றி, சேதமடைந்த நிலையில் உள்ளன. அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், அக்கட்டடங்களில் வகுப்புகளை நடத்த வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.மாவட்ட கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: துவக்க முதல் மேல்நிலை வரை அனைத்து அரசு பள்ளி கட்டடங்களின் நிலை குறித்தும், பொதுப்பணித்துறை இன்ஜினியர்களின் உதவியுடன் ஆய்வு செய்ய தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி சேதமடைந்த கட்டடங்களில் வகுப்புகள் நடத்த வேண்டாம்.அங்கு நடத்தப்படும் வகுப்புகளை வேறு பகுதிக்கு மாற்றவும், பள்ளிகளில் புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தால் அதன் திறப்பு விழாவிற்காக காத்திருக்காமல், துறை உயர் அதிகாரிகளின் முறையான அனுமதி பெற்று பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.பள்ளி அருகே தாழ்வாக செல்லும் மின் வயர்கள், உயர் மின்அழுத்த கம்பிகளை உடனடியாக மாற்றி அமைக்க, வளாகத்தில் மழைநீர் தேங்கவிடாமல் பார்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.

வெளிநாட்டு மாணவர்களுக்கு மலிவான கல்வி கேந்திரமாக இந்தியா திகழ்வதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

வெளிநாட்டு மாணவர்களுக்கு மலிவான கல்வி கேந்திரமாக இந்தியா திகழ்வதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இப்பட்டியலில், அதிக செலவு மிகுந்த கல்வி கேந்திரமாக ஆஸ்திரேலியா குறிப்பிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது: சர்வே நடத்தப்பட்ட 15 நாடுகளில், துருக்கி, சீனா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவே, உயர்கல்விக்கென குறைந்த கட்டணம் வசூலிக்கும் நாடாக திகழ்கிறது.இந்தியாவில், ஒரு இளநிலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் வெளிநாட்டு மாணவர், பல்கலைக்கழக கட்டணம் மற்றும் வாழ்க்கைச் செலவினங்கள் என்று சராசரியாக, ஆண்டிற்கு 5,642 அமெரிக்க டாலர்களை செலவழிக்கிறார். ஆனால், அவர் ஆஸ்திரேலியாவில் அதே காலகட்டத்திற்கு, அதே செலவினமாக 42,093 அமெரிக்க டாலர்களை செலவழிக்க வேண்டும்.சர்வே நடத்தப்பட்ட 15 நாடுகளில், தரமான கல்வியை வழங்கும் நாடுகளின் வரிசையில், இந்தியா 8ம் இடத்தைப் பெறுகிறது. சர்வேயில் கலந்துகொண்டவர்களில், 5% பேர், தங்களின் முதல் 3 விருப்ப நாடுகளில் ஒன்றாக இந்தியாவை தேர்வு செய்தனர்.ஆசிய மாணவர்கள் படிக்கச் செல்வதற்காக அதிகம் விரும்பும் நாடுகளில், ஆஸ்திரேலியா முதலிடத்தைப் பெறுகிறது. இது மிகவும் செலவு வாய்ந்த ஒரு நாடாக திகழ்கிறது. இதற்கடுத்த 2 இடங்களில், முறையே, சிங்கப்பூரும், அமெரிக்காவும் வருகின்றன.இந்த சர்வேயின்படி, பிரிட்டனில் ஒரு வெளிநாட்டு மாணவர், ஆண்டிற்கு 35,045 அமெரிக்க டாலர்களை செலவு செய்ய வேண்டியிருக்கும். பிரேசில் நாட்டில் 12,627 அமெரிக்க டாலர்களும், சீனாவில் 10,729 அமெரிக்க டாலர்களும், மெக்சிகோவில் 9,460 டாலர்களும் செலவழிக்க வேண்டும்.இந்திய பெற்றோர்களில் 47% பேர், தரமான உயர்கல்வி வழங்கும் நாடாக பிரிட்டனையும், 47% ஆஸ்திரேலியாவையும் தேர்வுசெய்யும் வேளையில், 46% பேர் தமது தாய்நாட்டையே தேர்வு செய்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.15 நாடுகளில், 4,500க்கும் மேற்பட்ட பெற்றோர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சர்வேயின்படி, மேற்கூறிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.