தமிழகத்தில் பயிற்சி முடித்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் 8 பேர், உதவி போலீஸ் சூப்பிரண்டுகளாக பணி நியமனம் செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் பயிற்சி முடித்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் 8 பேர், உதவி போலீஸ் சூப்பிரண்டுகளாக பணி நியமனம் செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி உதவி சூப்பிரண்டு
* நெல்லையில் பயிற்சி முடித்த அருண் சக்திகுமார், தூத்துக்குடி டவுண் உதவி போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* மதுரையில் பயிற்சியை நிறைவு செய்த தேஷ்முக்சேகர் சஞ்சய், தர்மபுரி மாவட்டம் அரூர் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.
* திருச்சியில் பயிற்சியை முடித்துள்ள ஜார்ஜி ஜார்ஜ், காஞ்சீபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தஞ்சையில் பயிற்சி பெற்ற ஓம்பிரகாஷ் மீனா, மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் உதவி சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.
ரோகிணி பிரியதர்ஷினி
* சிவகங்கையில் பயிற்சியை முடித்துள்ள ரோகிணி பிரியதர்ஷினி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* காஞ்சீபுரத்தில் பயிற்சி பெற்ற விக்ரந்த் பட்டீல், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை உதவி சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
* நாகப்பட்டினத்தில் பயிற்சி பெற்றுள்ள தீபாகனீகர், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை உதவி சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* திண்டுக்கல்லில் பயிற்சியை முடித்துள்ள சஷாங்க்சாய், நாகப்பட்டினம் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.
இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.