அரசு பள்ளிகளில், சேதமடைந்த கட்டடங்களில் வகுப்புகளை நடத்த வேண்டாம்
வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, அரசு பள்ளிகளில், சேதமடைந்த கட்டடங்களில் வகுப்புகளை நடத்த வேண்டாம் என, பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.பல்வேறு பகுதிகளில் அரசு பள்ளி கட்டட மேற்கூரை பெயர்ந்து, சுவர்களில் கீறல் விழுந்து பராமரிப்பின்றி, சேதமடைந்த நிலையில் உள்ளன. அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், அக்கட்டடங்களில் வகுப்புகளை நடத்த வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.மாவட்ட கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: துவக்க முதல் மேல்நிலை வரை அனைத்து அரசு பள்ளி கட்டடங்களின் நிலை குறித்தும், பொதுப்பணித்துறை இன்ஜினியர்களின் உதவியுடன் ஆய்வு செய்ய தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி சேதமடைந்த கட்டடங்களில் வகுப்புகள் நடத்த வேண்டாம்.அங்கு நடத்தப்படும் வகுப்புகளை வேறு பகுதிக்கு மாற்றவும், பள்ளிகளில் புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தால் அதன் திறப்பு விழாவிற்காக காத்திருக்காமல், துறை உயர் அதிகாரிகளின் முறையான அனுமதி பெற்று பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.பள்ளி அருகே தாழ்வாக செல்லும் மின் வயர்கள், உயர் மின்அழுத்த கம்பிகளை உடனடியாக மாற்றி அமைக்க, வளாகத்தில் மழைநீர் தேங்கவிடாமல் பார்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.
வெளிநாட்டு மாணவர்களுக்கு மலிவான கல்வி கேந்திரமாக இந்தியா திகழ்வதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
வெளிநாட்டு மாணவர்களுக்கு மலிவான கல்வி கேந்திரமாக இந்தியா திகழ்வதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இப்பட்டியலில், அதிக செலவு மிகுந்த கல்வி கேந்திரமாக ஆஸ்திரேலியா குறிப்பிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது: சர்வே நடத்தப்பட்ட 15 நாடுகளில், துருக்கி, சீனா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவே, உயர்கல்விக்கென குறைந்த கட்டணம் வசூலிக்கும் நாடாக திகழ்கிறது.இந்தியாவில், ஒரு இளநிலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் வெளிநாட்டு மாணவர், பல்கலைக்கழக கட்டணம் மற்றும் வாழ்க்கைச் செலவினங்கள் என்று சராசரியாக, ஆண்டிற்கு 5,642 அமெரிக்க டாலர்களை செலவழிக்கிறார். ஆனால், அவர் ஆஸ்திரேலியாவில் அதே காலகட்டத்திற்கு, அதே செலவினமாக 42,093 அமெரிக்க டாலர்களை செலவழிக்க வேண்டும்.சர்வே நடத்தப்பட்ட 15 நாடுகளில், தரமான கல்வியை வழங்கும் நாடுகளின் வரிசையில், இந்தியா 8ம் இடத்தைப் பெறுகிறது. சர்வேயில் கலந்துகொண்டவர்களில், 5% பேர், தங்களின் முதல் 3 விருப்ப நாடுகளில் ஒன்றாக இந்தியாவை தேர்வு செய்தனர்.ஆசிய மாணவர்கள் படிக்கச் செல்வதற்காக அதிகம் விரும்பும் நாடுகளில், ஆஸ்திரேலியா முதலிடத்தைப் பெறுகிறது. இது மிகவும் செலவு வாய்ந்த ஒரு நாடாக திகழ்கிறது. இதற்கடுத்த 2 இடங்களில், முறையே, சிங்கப்பூரும், அமெரிக்காவும் வருகின்றன.இந்த சர்வேயின்படி, பிரிட்டனில் ஒரு வெளிநாட்டு மாணவர், ஆண்டிற்கு 35,045 அமெரிக்க டாலர்களை செலவு செய்ய வேண்டியிருக்கும். பிரேசில் நாட்டில் 12,627 அமெரிக்க டாலர்களும், சீனாவில் 10,729 அமெரிக்க டாலர்களும், மெக்சிகோவில் 9,460 டாலர்களும் செலவழிக்க வேண்டும்.இந்திய பெற்றோர்களில் 47% பேர், தரமான உயர்கல்வி வழங்கும் நாடாக பிரிட்டனையும், 47% ஆஸ்திரேலியாவையும் தேர்வுசெய்யும் வேளையில், 46% பேர் தமது தாய்நாட்டையே தேர்வு செய்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.15 நாடுகளில், 4,500க்கும் மேற்பட்ட பெற்றோர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சர்வேயின்படி, மேற்கூறிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும், இம்மாதம் 29ம் தேதிக்குள் பயிற்சி கையேடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளை படித்து அதிக மதிப்பெண் பெறும் வகையில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட பயிற்சி கையேடு வழங்கப்படும்.அதில் ஒவ்வொரு பாடத்திலும் எந்த பகுதி முக்கியமானது. அடிக்கடி கேட்கப்பட்ட வினாக்கள் உள்ளிட்ட தகவல்கள் இருக்கும்.இந்த கையேடு அரசு பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம் அனுப்பப்படும். இம்மாதம் 29ம் தேதிக்குள் மாணவர்களுக்கு வழங்கிவிட வேண்டும் என, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
இந்தாண்டு பல்வேறு கல்லூரிகளில் வளாக நேர்காணலுக்கு வந்த சில முக்கிய நிறுவனங்கள்
தமிழகத்தின் பொறியியல் கல்லூரிகளை நோக்கி ஐ.டி. நிறுவனங்கள் செல்வது இந்தாண்டு அதிகரித்துள்ளது. கடந்தாண்டைவிட, 2 மடங்கு மாணவர்கள் அந்நிறுவனங்களால் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கான பணி வாய்ப்புகள் சற்று மந்தமாக இருந்த நிலையில், இந்தாண்டு நிலைமை மாறியுள்ளது. ஐ.டி. நிறுவனங்களின் மூலம் பணி வாய்ப்புகளைப் பெற்றவர்கள், கடந்தாண்டைவிட, இந்தாண்டு, இரண்டு மடங்கு அதிகம்.அவர்களுக்கான சம்பளம் ஆண்டிற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் வரை இருக்கிறது.வேலூரின் VIT கல்வி நிறுவனத்தில், 4 பன்னாட்டு நிறுவனங்களின் மூலம், மொத்தம் 5,828 மாணவர்கள் பணி வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். கடந்தாண்டை ஒப்பிடுகையில், இது 90% அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் 490 மாணவர்களுக்கு பணி வாய்ப்புகள் கிடைத்துள்ளன.மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களின் தேசிய அமைப்பு(NASSCOM), இந்த 2014-15ம் ஆண்டில் மட்டும், புதிய பட்டதாரிகளுக்கு, ஐ.டி. துறையில் சுமார் 30,000 பணி வாய்ப்புகள் கிடைக்கும் என்று கணித்துள்ளது.வேலூரின் VIT கல்வி நிறுவனத்தில் மட்டும், மொத்தம் 1,911 மாணவர்களை பணிக்கு தேர்வு செய்துள்ளது Cognizant நிறுவனம். இதுவொரு அதிகபட்ச அளவாகும். தஞ்சையிலுள்ள சாஸ்த்ரா பல்கலையில், கடந்த வாரம் 1,212 மாணவர்கள், TCS உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்கள் மூலம் பணி வாய்ப்புகளைப் பெற்றனர்.பெரிய அளவிலான ஆளெடுப்பு பணிகள், முதல்நிலை கல்வி நிறுவனங்களில் தொடங்கியுள்ளது. அடுத்து, இரண்டாம் நிலை கல்லூரிகளை நோக்கி அது நகரவுள்ளது. முக்கியமான அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள், செப்டம்பர் 3ம் வாரத்தில் ஆளெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கின்றன.மேற்கூறிய கல்வி நிறுவன மாணவர்கள், பணி வாய்ப்புகளைப் பெற்றாலும், அவர்களின் ஊதியம், ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் பெறும் ஊதியத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவே. இவர்களின் சராசரி ஊதியம் பெரும்பாலும், ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.3.5 லட்சம் வரையிலேயே இருக்கிறது.கடந்த 2013ம் ஆண்டில், ஐ.ஐ.டி., சென்னையில் பணி வாய்ப்பை பெற்ற ஒரு மாணவர் பெற்ற ஊதியம் ரூ.1 கோடிக்கும் மேல்! இந்தாண்டு VIT -ல் ஒரு மாணவர் பெற்ற அதிகபட்ச ஊதியம் ரூ.23 லட்சம். அதேபோன்று, தஞ்சை சாஸ்த்ரா பல்கலை மாணவர் பெற்ற அதிகபட்ச சம்பளம் ரூ.17.25 லட்சம். ராஜலட்சுமி பொறியில் கல்லூரி மாணவருக்கான அதிகபட்ச சம்பளம் ரூ.7.50 லட்சம்.பொதுவாகவே, பெரிய நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட பணிக்காக மாணவர்களை எதிர்பார்த்து பணியமர்த்துகின்றன. ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களில், அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப மாணவர்கள் கிடைக்கிறார்கள். எனவேதான், அவர்களுக்கு மிக அதிக சம்பளம் கிடைக்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இந்தாண்டு பல்வேறு கல்லூரிகளில் வளாக நேர்காணலுக்கு வந்த சில முக்கிய நிறுவனங்கள்
Cognizant, TCS, Wipro, IBM, Accenture, Code Nation, Paypal, Ashok Leyland, Dell, Whirlpool, Amazon, TVS Motors, Microsoft, Avnet, Freshdesk, Lister, Flipkart and Deshaw etc...
நாட்டில் சிறுபான்மையினர் நடத்தும், சில கல்வி நிறுவனங்களில் கூட்டம் குவிவதைத் தவிக்க, தரமான ஆரம்ப பள்ளிகளை உருவாக்க, அரசு பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கல்விபெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், மாணவர்கள் சேர்க்கையை நடத்தும்படி, சில பள்ளிகளுக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் தவே மற்றும் லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்ததாவது: மருத்துவ கல்லூரிகளை எடுத்துக் கொண்டால், அரசு மருத்துவ கல்லூரிகளுக்கே மவுசு அதிகம் உள்ளது.அங்கு சேரவே பெரும்பாலான மாணவர்கள் விரும்புகின்றனர். அதேநேரத்தில், தனியார் கல்லூரிகள் எல்லாம் வர்த்தக நோக்கத்தில் செயல்படுகின்றன. அரசால் நடத்தப்படும் மருத்துவ கல்லூரிகள், சிறப்பாக செயல்பட முடிகின்றன என்றால், ஏன் சிறந்த ஆரம்ப பள்ளிகளை அரசால் உருவாக்க முடியாது. சிறந்த ஆரம்ப பள்ளிகளை, அதிக அளவில் கொண்டிருக்க வேண்டியது அரசின் கடமை.எனவே, சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில், மாணவர்கள் குவிவதைத் தடுக்க, சிறந்த ஆரம்ப பள்ளிகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கோவை, திருப்பூர், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 19 மாவட்டங்களில், 1,287 மலைப்பிரதேச கிராமங்களில் உள்ள மாணவர்கள், ஜீப், ஆட்டோ போன்ற வாகனங்களில் பள்ளிகளுக்குச் செல்லவும், தேவையான குழந்தைகளுக்கு, உடன் பாதுகாவலர்கள் செல்லவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
கோவை, திருப்பூர், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 19 மாவட்டங்களில், 1,287 மலைப்பிரதேச கிராமங்களில் உள்ள மாணவர்கள், ஜீப், ஆட்டோ போன்ற வாகனங்களில் பள்ளிகளுக்குச் செல்லவும், தேவையான குழந்தைகளுக்கு, உடன் பாதுகாவலர்கள் செல்லவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.நடப்பு கல்வி ஆண்டில், 14,749 பேர் இந்த வசதியை பெறுகின்றனர். தனியார் பள்ளிகள், மலைவாழ் பகுதிகளில் உள்ள மாணவர்களின் கல்வி குறித்து, சிந்திப்பது கூட கிடையாது. போதிய சாலை வசதி இல்லாத, அடர்ந்த காடுகளுக்கு நடுவே உள்ள, சின்ன சின்ன கிராமங்களில் வாழும் குழந்தைகள், கல்வி பயில வேண்டும் என்பதற்காக, தமிழக அரசு, சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.மலைப்பிரதேச பகுதிகளில் உள்ள சிறுவர்கள், பள்ளிகளுக்குச் செல்வதில் உள்ள பிரச்னைகளை அறிந்த தமிழக அரசு, மாணவர்கள், பாதுகாப்புடன் பள்ளிகளுக்குச் செல்வதை உறுதிபடுத்தும் வகையில், வாகன வசதி திட்டத்தை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.19 மாவட்டங்கள்: இந்த திட்டத்தால், கடந்த ஆண்டு 10 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்தனர். நடப்பு கல்வி ஆண்டில், கோவை, திருப்பூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, தஞ்சாவூர், நாமக்கல், சேலம், நாகை, தேனி, நீலகிரி, நெல்லை, திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர் ஆகிய 19 மாவட்டங்களில் 1,287 சிறு சிறு பகுதிகள் அடையாளம் காணப்பட்டன. இந்த கிராமங்களில் வசிக்கும் 14,749 குழந்தைகள், எந்த பிரச்னையும் இன்றி, வாகனங்களில் பள்ளி சென்றுவர, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரகம் ஏற்பாடு செய்துள்ளது.மலை பகுதிகளில் உள்ள கிராமங்களும், பள்ளிகளும், அருகருகே உள்ளன. மேற்கண்ட மாவட்டங்களில் 473 ஆரம்பப் பள்ளிகளும், 182 அரசு நடுநிலைப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. எட்டாம் வகுப்பு வரையிலான படிப்பிற்கு, இந்த அரசு பள்ளிகளை நம்பித் தான் மலைவாழ் பகுதி மாணவர்கள் உள்ளனர்.இவர்கள், உரிய பாதுகாப்புடன் பள்ளிகளுக்கு சென்றுவர வேண்டும் என்பதற்காக, அந்த பகுதிகளில் உள்ள ஆட்டோ, ஜீப் போன்ற வாகனங்கள் மூலம் பள்ளி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக, தேவையான மாணவர்களுக்கு பாதுகாப்பாக, உடன் ஒருவர் செல்லவும், தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதற்காக, பாதுகாவலர்களுக்கு மாதம் 250 ரூபாய் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது..4.42 கோடி நிதி: மாணவர்களின் வாகன செலவுக்காக, ஒரு ஆண்டுக்கு தலா 3,000 ரூபாய் ஒதுக்கப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டில், 4.42 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. அனைவருக்கும் கல்வி திட்ட நிதியில் இருந்து, இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: கிராம வாரியாக, மாணவர் எண்ணிக்கை வாரியாக கணக்கெடுப்பு நடத்தி, அதன் விவரம் தற்போது அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இதை, மத்திய அரசுக்கு அனுப்பி, உரிய நிதி பெறப்படும். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும், வாகன வசதி, பாதுகாவலர் வசதி செய்யப்படுகிறது. நடப்பாண்டில் 9,595 மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தலா, 5,000 ரூபாய் செலவில், வாகன வசதி மற்றும் பாதுகாவலர் வசதி செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
தமிழகத்தில், டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இம்மாதம் 15ம் தேதி தொடங்கும் என, மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில், டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இம்மாதம் 15ம் தேதி தொடங்கும் என, மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் 23 அரசு நர்சிங் கல்லூரிகள் உள்ளன. இதில், டிப்ளமோ நர்சிங் இரண்டாண்டு படிப்புக்கு 2,000 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 8,101 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தர வரிசைப் பட்டியல் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 15ம் தேதி தொடங்குகிறது. அன்று, மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது.தொடர்ந்து 18ம் தேதி வரை, பிற பிரிவுகளுக்கான கலந்தாய்வும் நடக்க உள்ளது. மேலும் விவரங்கள் தேவைப்படுவோர், tn.health.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
ரயில்வே தொடர்பான படிப்புகளை மட்டும் வழங்கும் வகையில், ஒரு ரயில்வே பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான செயல்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்துள்ளார்.
ரயில்வே தொடர்பான படிப்புகளை மட்டும் வழங்கும் வகையில், ஒரு ரயில்வே பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான செயல்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்துள்ளார்.இதுதொடர்பாக கூறப்படுவதாவது: இந்த வகையில், இந்தியாவில் அமைக்கப்படும் முதல் கல்வி நிறுவனமாக திகழும் இந்த ரயில்வே பல்கலை, சீன கல்வி நிறுவனங்களை மாதிரியாக கொண்டிருக்கும்.சீன தேசிய ரயில்வே நிர்வாகத்திடம், தாங்கள் இதுதொடர்பாக மேற்கொண்ட கலந்துரையாடல் பற்றிய தகவல், மத்திய ரயில்வே அமைச்சகத்தால், மத்திய கேபினட் செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.ரயில்வே தொடர்பான படிப்புகளை கற்றுக்கொடுக்கும் பல்வேறான கல்வி நிறுவனங்கள் சீனாவில் உள்ளன மற்றும் அவை கடந்த 100 ஆண்டுகால பாரம்பரியத்தைப் பின்பற்றி வருகின்றன. எனவே, இப்படிப்புகள் தொடர்பான பாடத்திட்டம் வகுத்தல் மற்றும் நிர்வாகம் தொடர்பாக, சீன அதிகாரிகளின் உதவி கேட்கப்படும். ஏனெனில், இதுதொடர்பான நீண்ட அனுபவத்தைப் பெற்றவர்கள் அவர்கள்.ரயில்வே தொடர்பான பொறியியல் படிப்புகளை வழங்குவது சம்பந்தமாக, ஐ.ஐ.டி., காரக்பூர், ரயில்வே அமைச்சகத்துடன் ஒத்துழைப்பை மேற்கொள்ளும். இதே நோக்கத்திற்காக, EdCIL உடன், வரும் செப்டம்பர் 30ம் தேதி, ஒரு ஒப்பந்தத்தில், ரயில்வே அமைச்சகம் கையெழுத்திடவுள்ளது.இந்த ரயில்வே பல்கலையை, நாட்டின் எந்த இடத்தில் அமைப்பது என்பது, EdCIL புராஜெக்ட் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவுரை ஆகியவற்றின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். அதேசமயத்தில், இந்த பல்கலை அமையவுள்ள இடம், பல்வகைப் போக்குவரத்தின் மூலம் எளிதாக அடையக்கூடிய வகையில் கட்டாயம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ரயில்வே தொடர்பான இளநிலை மற்றும் முதுநிலை அளவிலான, பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகள் வழங்கப்படும் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்ணாபல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரிகளில் பேராசிரியர்கள், கூடுதல் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் என மொத்தம் 450 பேர்களை விரைவில் நியமிக்க அண்ணாபல்கலைக்கழகம் முடிவு செய்து உள்ளது.
தமிழ்நாட்டில் கல்வித்தரத்தை உலகத்தரத்திற்கு உயர்த்தவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா கல்விக்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். அதைத்தொடர்ந்து உயர்கல்வித்துறைக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் நடப்பு ஆண்டில் அதிக நிதியை ஒதுக்கி உள்ளார்.
மேலும் ஆராய்ச்சிக்காகவும் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு தனியாக நிதியை ஒதுக்கி உள்ளார். கல்வி மேம்பாட்டுக்காக பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை, பள்ளிக்கல்வித்துறை மூலம் நிரப்ப உத்தரவிட்டார். அதன்படி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அதுபோல அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் உதவி பேராசிரியர்கள் 2ஆயிரம் பேர் விரைவில் நியமிக்க அதற்கான ஆயத்தப்பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஈடுபட்டுள்ளது.
450 ஆசிரியர்கள் நியமனம்
தமிழ்நாட்டில் காஞ்சீபுரம், ஆரணி, விழுப்புரம், திண்டிவனம், பட்டுக்கோட்டை, திருக்குவளை, அரியலூர், பண்ருட்டி, ராமநாதபுரம், திண்டுக்கல், நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய இடங்களில் அண்ணாபல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகள் உறுப்புக்கல்லூரிகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த கல்லூரிகளில் பேராசிரியர்கள், கூடுதல் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் ஆகிய பணிகள் 450 காலியாக இருக்கின்றன. இந்த இடங்களை நிரப்ப அரசும், அண்ணாபல்கலைக்கழகமும் முடிவு செய்துள்ளன.
அதன்படி நேரடியாக 450 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு அண்ணாபல்கலைக்கழக இணையதளத்தில் இந்த மாத (செப்டம்பர்) இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளது. விண்ணப்பித்தவர்களின் தகுதி, இட ஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
தமிழக அரசு அனுமதியின்றி, பிசியோதெரபி டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு நடத்தப்படுவதை தடைசெய்ய வேண்டும் என, தமிழ்நாடு இயன்முறை மருத்துவர்கள் பெருமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது
தமிழக அரசு அனுமதியின்றி, பிசியோதெரபி டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு நடத்தப்படுவதை தடைசெய்ய வேண்டும் என, தமிழ்நாடு இயன்முறை மருத்துவர்கள் பெருமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.மன்ற நிர்வாகிகள், பிசியோதெரபி தினத்தையொட்டி (செப்., 8), 29 கலெக்டர் அலுவலகங்களிலும், முதல்வர் அலுவலகத்திலும், கோரிக்கை மனு கொடுத்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது: மாநில பிசியோதெரபி கவுன்சில் அமைக்க வேண்டும். தமிழக அரசு அனுமதி இல்லாமல், பிசியோதெரபி டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள், பல்வேறு கல்வி நிறுவனங்கள் மூலம் நடத்தப்படுகின்றன; இதை தடை செய்ய வேண்டும்.மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை உட்பட அனைத்து அரசு மருத்துவமனைகளில், ஏற்கனவே உள்ள பிசியோதெரபிஸ்ட் பணியிடங்களுடன், பெருகி வரும் நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
புதிய ஆசிரியர் பணியில் சேர்வதில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு இந்த வார இறுதிக்குள் தீர்வு கிடைத்துவிடும் என கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது
புதிய ஆசிரியர் பணியில் சேர்வதில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு இந்த வார இறுதிக்குள் தீர்வு கிடைத்துவிடும் என கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறைக்கு தேர்வு பெற்ற 14,700 பேரை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு கடந்த வாரம் நடந்தது. இதில் 100 பேர் வரை ஆப்சென்ட் ஆனதாக தெரிய வந்துள்ளது.இது குறித்து கல்வித்துறை வட்டாரம் நேற்று கூறுகையில், "ஆப்சென்ட் ஆனதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சம்பந்தபட்டவர்கள் ஆப்சென்ட் ஆனதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். அவர்கள் அனைவரும் பணியில் சேர வாய்ப்பு அளிக்கப்படும்" என தெரிவித்தது.இதற்கிடையே வெயிட்டேஜ் மதிப்பெண் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை, புதிய ஆசிரியர் பணியில் சேர இடைக்கால தடை விதித்தது.இந்த விவகாரத்தில் தமிழக அரசு மதுரை நீதிமன்றத்தில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரச்னையில் இந்த வார இறுதிக்குள் தீர்வு கிடைத்து விடும் எனவும் கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.
1,047 காலி பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட குரூப்–2 முதல் நிலை தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வு–2–ல்(குரூப்–2) துணை வணிகவரி அலுவலர், சார்பதிவாளர் நிலை–2, தொழிலாளர் உதவி ஆய்வாளர், நிதித்துறையில் உதவிப்பிரிவு அலுவலர், சட்டத்துறையில் உதவிப்பிரிவு அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள 19 பதவிகளுக்கான 1,047 பணியிடங்களுக்காக, கடந்த ஆண்டு டிசம்பர் 1–ந் தேதி தேர்வு நடந்தது.
இந்த தேர்வு தமிழகம் முழுவதும் 114 நகரங்களில், 2 ஆயிரத்து 269 தேர்வு மையங்களில் நடந்தது. 4 லட்சத்து 98 ஆயிரத்து 471 பட்டதாரிகள் தேர்வு எழுதினர். முதல் நிலை தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதில், 11,497 பேர் தேர்ச்சி பெற்று, அடுத்தக்கட்ட முதன்மை தேர்வுக்கு தேர்வாகி உள்ளனர். அவர்களின் விவரம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
குரூப்–2–ல் காலியாக உள்ள 19 பதவிகளுக்கான 1,047 காலி பணியிடங்களுக்கான முதல் நிலை எழுத்து தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 1–ந் தேதி நடந்தது. தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் முதன்மை எழுத்து தேர்விற்கு தேர்வு செய்யப்பட்ட 11,497 விண்ணப்பதாரர்களின் பதிபெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைவளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதன்மை எழுத்து தேர்வு நவம்பர் 8–ந் தேதி காலை மற்றும் மதியம் நடைபெறும்.
நவம்பர் மாதம் 8–ந் தேதி நடக்கும் முதன்மை தேர்வில் வெற்றி பெறுகிறவர்கள், அடுத்தபடியாக நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசு பணிகள் வழங்கப்படும்.
மதிப்பெண் சான்றுகளின் உண்மை தன்மை அறிய, அரசு தேர்வுகள் இயக்ககம், ஆன்-லைன் முறையை விரைவில் கொண்டு வருகிறது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலை, அரசு தேர்வுகள் இயக்ககம் வழங்குகிறது. பணியில் சேரும்போது, இந்த சான்றிதழ்கள் முக்கிய ஆவணம். இதன் உண்மை தன்மையை அறிய, அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு மீண்டும் அனுப்பி உறுதி செய்யப்படுகிறது.
இதுபோல், அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு, ஆயிரக்கணக்கான சான்றுகள் வருவதால், அவற்றை சரி பார்ப்பதில், பெரும் தாமதம் ஏற்படுகிறது. இதை தீர்க்க, ஆன்-லைன் மூலம், கல்வி சான்றுகளின் உண்மை தன்மை அறியும் வகையில், புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கல்வியாண்டுகள் வாரியாக, சான்றிதழ்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. மதிப்பெண் சான்றிதழில் உள்ள மாணவர் பெயர், பிறந்த தேதி, கோடு எண் மற்றும் தேர்வு பதிவு எண்களை குறிப்பிட்டு விண்ணப்பித்தால், பதிலை, ஆன்-லைனில் உடனே உறுதி செய்து விடும் வகையில், திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.
Sanjeevini NRLM Recruitments September 2014 : Consultant and Assistant Recruitments in Sanjeevini Karnataka State Rural Livelihood Promotion Society
Sanjeevini
Karnataka State Rural Livelihood Promotion Society
Rural Development and Panchayath Raj Department
55, Abhaya Complex 5th Floor, Risaldhar Street,
Sehshadripuram, Bengaluru 560 020
Karnataka
Applications are invited for various consultants posts in Sanjeevini Karnataka State Rural Livelihood Promotion SocietyAdvertisement No.Advertisement date 01.09.2014 Last date 15.09.2014 Posts :
|
ONGC Recruitments for Rajahmundry Division September 2014 : Assistant, Technical Assistant, Fireman, Technician and Driver in Oil and Natural Gas Corporation Ltd (ONGC) Rajahmundry ONGC Karaikal Recruitments September 2014 for various Jobs..... ONGC Recruitments September 2014 : ONGC Chennai Recruitments for Junior Motor Vehicle Driver (HV), Junior Security Supervisor, Junior Assistant, Assistant Technician and Grade III Assistant Posts
ONGC Recruitments for Rajahmundry Division September 2014 : Assistant, Technical Assistant, Fireman, Technician and Driver in Oil and Natural Gas Corporation Ltd (ONGC) Rajahmundry
Oil and Natural Gas Corporation Ltd (ONGC)
Online Applications are invited for the Posts of Assistant, Technical Assistant, Fireman, Technician and Driver in ONGC RajahmundryAdvertisement No.SS/RJY&EOA/4/2014
Advertisement date 02.09.2014
Last date online 27.09.2014 Hall Ticket download from 28.10.2014 Exam date 16.11.2014
Posts : Total 183 Posts
Notification http://eapplynew.
Online Application http://eapplynew. |
ONGC Karaikal Recruitments September 2014 for various Jobs.....
Oil and Natural Gas Corporation Ltd (ONGC)
Online Applications are invited for the Posts of Assistant, Technical Assistant, Fireman, Technician and Driver in ONGC KaraikalAdvertisement No.SS/KKL/3/2014
Advertisement date 02.09.2014
Last date online 27.09.2014 Hall Ticket download from 28.10.2014 Exam date 16.11.2014
Posts : Total 117 Posts
Notification http://eapplynew.
Online Application http://eapplynew. |
ONGC Recruitments September 2014 : ONGC Chennai Recruitments for Junior Motor Vehicle Driver (HV), Junior Security Supervisor, Junior Assistant, Assistant Technician and Grade III Assistant Posts
Oil and Natural Gas Corporation Ltd (ONGC)
Online Applications are invited for the Posts of Assistant, Technician and Driver in ONGC ChennaiAdvertisement No.SS/2/CHN/2014
Advertisement date 02.09.2014
Last date online 27.09.2014 Hall Ticket download from 28.10.2014 Exam date 16.11.2014
Posts :
Notification English http://eapplynew.com/
Notification in Tamil http://epaper. Online Application http://eapplynew. |
சிறப்பாக பணிபுரிந்த 377 ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி அமைச்சர் வீரமணி, ராதாகிருஷ்ணன் விருது வழங்கினார்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில், சென்னையில் ஆசிரியர் தின விழா நடந்தது. துறை முதன்மை செயலர் சபிதா தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் வரவேற்றார்.
சிறப்பாக பணிபுரிந்த 377 ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி அமைச்சர் வீரமணி, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கினார். இந்த விருது, 5,000 ரூபாய் ரொக்கம், வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு மடல் ஆகியவை அடங்கும். அமைச்சர் பேசுகையில், "கல்வியில், தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டு வரும் வகையில் தமிழக அரசு, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் 53,258 ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர், சமுதாய உணர்வுடன் பணியாற்றி, தமிழகத்தின் புகழை உலகளவில் எடுத்துச்செல்ல வேண்டும்" என்றார்.
முன்னதாக, சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, தேசிய ஆசிரியர் நல நிதிக்கு 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சரிடம் வழங்கினார்.
விழாவில், அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குனர் கண்ணப்பன், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு ஐகோர்ட்டில் ‘அப்பீல்’ செய்துள்ளது.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா உள்பட 18 பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த தனி நீதிபதி, ‘பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான கவுன்சிலிங்கை நடத்திக்கொள்ளலாம். ஆனால், யாருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கக்கூடாது. ஏற்கனவே நடந்த கவுன்சிலிங்கின் போது பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு இருந்தால் அவர்கள் பணியில் சேர தடை விதிக்கப்படுகிறது’ என்று நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி நேற்று நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு ஆஜராகி, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அரசு சார்பில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த மனுவை அவசர மனுவாக எடுத்துக்கொண்டு உடனே விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, மனுவை தாக்கல் செய்யும்படி கூறிய நீதிபதிகள், அவ்வாறு மனுவை தாக்கல் செய்து விசாரணைக்கு பட்டியலிடும் பட்சத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். கோர்ட்டு பணி நேரம் முடிவடையும் நேரம் (மாலை 4.45 மணி) வரை ‘அப்பீல்’ மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.
இதனால், தமிழக அரசின் ‘அப்பீல்’ மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர் நியமனம் தொடர்பாக, தமிழக அரசிடம் இருந்து புதிய அரசாணை வெளிவந்தால், அதை நிறைவேற்ற தயாராக உள்ளோம் என ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.
ஆசிரியர் நியமனம் தொடர்பாக, தமிழக அரசிடம் இருந்து புதிய அரசாணை வெளிவந்தால், அதை நிறைவேற்ற தயாராக உள்ளோம் என ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.
புதிய ஆசிரியர் நியமன விவகாரம் இடியாப்ப சிக்கலாக மாறியுள்ளது. வெயிட்டேஜ் மதிப்பெண்ணை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், ஆசிரியரை பணி நியமனம் செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த விவகாரத்தில், தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த பிரச்னையில், அடுத்ததாக என்ன நடக்கும் எனத் தெரியாமல் தேர்வுபெற்ற ஆசிரியரும், தேர்வு பெறாத ஆசிரியரும் திகிலில் உள்ளனர்.
ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிட்டபோது, தற்போதைய தேர்வுப் பட்டியல் தற்காலிகமானது; வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு, தேர்வுப் பட்டியல் உட்பட்டது என டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. இதனால் ஏதாவது மாற்றம் வரலாம் எனவும், தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து டி.ஆர்.பி., வட்டாரம் கூறுகையில், "கடைசியாக வெளியிட்ட அரசாணையின் அடிப்படையில்தான் ஆசிரியர் தேர்வுப் பட்டியலை வெளியிட்டோம். இனி, மேலும் ஒரு புதிய அரசாணை வந்தால், அதற்கேற்பவும் பட்டியலை தயாரித்து வெளியிட தயாராக உள்ளோம்" என தெரிவித்தது.
தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களைச் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களைச் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
பி.எஸ்ஸி., பி.எட். படித்துள்ள எனக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பரிந்துரையின்பேரில் சான்றிதழ் சரிபார்ப்பு 2010-ஆம் ஆண்டு மே 13-இல் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், என்னை பணிக்குத் தேர்வு செய்யவில்லை. அந்தச் சமயத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை.
இதற்கிடையே, தகுதித் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. 2011-2012-இல் நடந்த தேர்வில் 88 மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். அதன்பிறகும் பணிக்குத் தேர்வாகவில்லை. 2013-இல் நடந்த தகுதித் தேர்வில், 150-க்கு 92 மதிப்பெண்கள் பெற்றேன். ஆசிரியர் பணி நியமனத்துக்கு இது தகுதியான மதிப்பெண் ஆகும். ஆனால், பணி நியமனத்துக்கு முந்தைய நடைமுறைப்படி பரிசீலனை செய்யப்படவில்லை.
மேலும், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு தகுதிகாண் மதிப்பெண் முறை அறிமுகம் செய்யப்பட்டு, அதற்கான அரசாணை 2014-ஆம் ஆண்டு மே 30-இல் வெளியிடப்பட்டது. இதில் பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், தகுதித் தேர்வு மதிப்பெண் ஆகியவற்றைக் கொண்டு தகுதிகாண் மதிப்பெண் கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்தப் புதிய நடைமுறை, பணி நியமனத்துக்குக் காத்திருக்கும் போட்டியாளர்களுக்கு பாகுபாடு காட்டுவதாக அமைந்துவிடும். ஏனெனில், நடைமுறையில் இருக்கும் தேர்வு முறை, வினாத்தாள், மதிப்பீடு ஆகியவையும், 25 ஆண்டுகளுக்கு முந்தைய தேர்வு முறையும் ஒரே மாதிரியானதல்ல. 25 ஆண்டுகளுக்கு முன்பு அதிக மதிப்பெண்கள் எடுப்பது என்பது சுலபமல்ல. ஆனால், இப்போது நிலை மாறியிருக்கிறது. ஆகவே, சமீபத்தில் தேர்வு எழுதியவர்களையும், பல ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு எழுதியவர்களையும் ஒரே மாதிரியாகக் கருதுவது ஏற்புடையதல்ல.
அதேபோல பதிவு மூப்பு, பணி அனுபவம் ஆகியவற்றுக்கு தகுதிகாண் மதிப்பெண் வழங்கப்படவில்லை. இந்தத் தகுதிகாண் மதிப்பெண் முறை அறிவியல்பூர்வமாக சிந்திக்காமல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். மேலும், இதன் அடிப்படையில் நடத்தப்படும் ஆசிரியர் பணி நியமனக் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதேபோல, மேலும் 17 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரண், தகுதிகாண் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்தார். இருப்பினும், கலந்தாய்வு நடத்துவதற்கு எவ்விதத் தடையும இல்லையென்று உத்தரவிட்டார். ஏற்கெனவே, தகுதிகாண் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டிருந்தால், அதற்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
உலக நாடுகள் தங்களை வளர்த்து கொள்ள கடனுதவிகளை உலக வங்கி அளித்து வருகிறது. குறிப்பாக ஏழை நாடுகள் தங்களை வளப்படுத்தி கொள்ள நிபந்தனைகளுடன் கூடிய கடன் உதவி திட்டங்களை அளித்து வருகிறது. உலக வங்கி மற்ற வங்கிகளை போல செயல்படுவதில்லை. வணிக நோக்கத்தை தவிர்த்து வறுமையை குறைப்பதையும், வளர்ச்சியை அதிகரிப்பதையும் நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.
உலக நாடுகள் தங்களை வளர்த்து கொள்ள கடனுதவிகளை உலக வங்கி அளித்து வருகிறது. குறிப்பாக ஏழை நாடுகள் தங்களை வளப்படுத்தி கொள்ள நிபந்தனைகளுடன் கூடிய கடன் உதவி திட்டங்களை அளித்து வருகிறது. உலக வங்கி மற்ற வங்கிகளை போல செயல்படுவதில்லை. வணிக நோக்கத்தை தவிர்த்து வறுமையை குறைப்பதையும், வளர்ச்சியை அதிகரிப்பதையும் நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.
* பணிவாய்ப்புகள்:
ஜூனியர் புரொபசனல் அசோசியேட், தொழில் நுட்பவியலாளர்கள், ஒப்பந்த ஆலோசனைதாரர் போன்று பல்வேறு பணிவாய்ப்புகள் உள்ளன. ஒவ்வொரு துறை சார்ந்தும் பணியாளர்கள் பணி செய்கிறார்கள். குறிப்பாக நீர், விவசாயம் மற்றும் கட்டுமான துறை சார்ந்த வல்லுநர்களுக்கு அதிகம் வாய்ப்பிருக்கிறது.
* தேர்ந்தெடுக்கும் முறை:
சில குறிப்பிட்ட பதவிகளுக்கு உலக வங்கி நிறுவனமே தனிப்பட்ட முறையில் ஆட்களை பணி அமர்த்துகிறது. அவை தவிர பெரும்பாலான வேலைகள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் ஆட்களை தேர்வு செய்கிறார்கள். இந்த பணியில் சேர விரும்புவர்கள் அதிகம் பயணம் செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும்.
* ஊதியம்:
நாம் எந்த மாதிரியான ஒப்பந்தத்தில் கையெழுத்து செய்திருக்கிறோமோ அதன்படி ஊதியம் வழங்கப்படும். மேலும், அனுபவம், தகுதி ஆகியவற்றை பொருத்தும் ஊதியம் மாறுபடும். ஒப்பந்த காலத்திற்கு ஏற்றவாறு தினசரி அல்லது மாத சம்பளமாக வழங்கப்படும்.
* தகுதி:
பணிக்கு தகுந்தவாறு தகுதிகள் மாறுபடும். பொதுவான தகுதிகளாக ஆங்கில மொழித்திறன் சிறப்பாக இருக்க வேண்டும். கூடுதலாக அரபிக், சீனம், பிரெஞ்சு, போர்ச்சுகீசிய மொழி, ருஷ்ய மொழி, ஸ்பானிஸ் மொழிகளில் ஏதேனும் தெரிந்திருந்தால் அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.
கல்வித் தகுதியை பொறுத்தவரையில் முதுநிலை பாடத்தில் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுநலம், சுகாதாரம், பொருளாதாரம், உணவு, சமூக அறிவியல் போன்றவற்றை ஆராய்ந்து முடிவுகளை எடுக்க கூடியவராக இருத்தல் வேண்டும். தகவல் பரிமாற்றங்கள் இணையம் வழியாக நடப்பதால் தொழில்நுட்பங்களை திறம்பட கையாள்பவராக இருத்தல் வேண்டும்.
* விண்ணப்பிக்கும் முறை:
உலக வங்கி ஆண்டுதோறும் மிக அதிக அளவு எண்ணிக்கையிலான விண்ணப்பங்களை கையாள்கிறது. எந்த பதவிகளுக்கு விளம்பரம் செய்திருந்தார்களோ அந்த பதவிக்கு மட்டுமே ஆட்களை தேர்வு செய்கிறார்கள். மேலும், உலக உலக வங்கி இணையதளம் மூலமாக அனுப்பப்பட்ட விண்ணப்பங்களை மட்டுமே ஏற்றுக் கொள்கிறார்கள்.
மருத்துவம் படித்தவராக இருந்தாலும் சரி. படிக்காதவராக இருந்தாலும் சரி. சேவை மனப்பான்மை உள்ளவர்கள் தாராளமாய் மேற்கொள்ள கூடிய படிப்பு முதுநிலை பொதுசுகாதார ( பப்ளிக் ஹெல்த்) படிப்பு.
சில ஆண்டுகள் கிளினிக்கில் துறையில் பணிபுரிந்து விட்டு, அதே துறையில் நிர்வாகம் மற்றும் மேலாண்மை பணிகளில் செல்ல விரும்புவோருக்கு முதுநிலை பப்ளிக் ஹெல்த் படிப்பு துணை புரிகிறது. வெறும் கிளினிக்கல் பயிற்சிகளில் மட்டுமே திருப்தியடையாமல், நிர்வாக பணிகளிலும் ஆர்வம் உள்ள நபர்களுக்கு இந்த படிப்பு ஒரு நல்ல வடிகால்.
சில கல்வி நிறுவனங்களில், இந்த படிப்பில் ( மாஸ்டர்ஸ் இன் பப்ளிக் ஹெல்த் - எம்பிஎச்) மருத்துவம் சாராத நபர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. இது ஒரு மேலாண்மை சார்ந்த படிப்பாக இருப்பதால், பொதுத்துறையில் எப்படி சிறப்பாக பணிபுரிவது என்பதை கற்றுக் கொள்ள முடியும்.
* வரும்முன் காப்போம் கருத்தாக்கம்:
ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை விட, மனிதனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று எதுவுமில்லை. பப்ளிக் ஹெல்த் என்பது கல்வி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கற்றுக் கொடுப்பது மற்றும் நோய்களை தடுப்பது ஆகிய நடைமுறைகளின் வழியாக ஒரு சமூகத்தின் சுகவாழ்வை உறுதி செய்யும் ஒரு அறிவியலாகும்.
இப்படிப்பில் ஒரு மாணவர்,சமூகத்தை எவ்வாறு அணுகி, அதன் சுகாதார அம்சங்களை ஆராய்ந்து விஷயங்களை அறிந்து கொண்டு சுகாதார சிக்கல்களை எவ்வாறு தீர்ப்பது என்பதை பற்றி கற்றுத் தரப்படும்.
* பப்ளிக் ஹெல்த் மற்றும் மருத்துவமனை நிர்வாகம்:
மருத்துவமனை மேலாண்மை மற்றும் நிர்வாகம் ஆகிய 2 விஷயங்களில் இருந்தும் முதுநிலை பப்ளிக் ஹெல்த் படிப்பு என்பது வேறுபட்டதாகும்.
மெடிக்கல் சயின்ஸ் மற்றும் துணைநிலை மெடிக்கல் சயின்ஸ் படித்த மாணவர்களுக்கு, முதுநிலை மருத்துவ மனை நிர்வாகப் படிப்பு ஏற்றது. மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளில் பணிபுரிய விரும்பும் நபர்கள் இப்படிப்புகளை மேற்கொள்கிறார்கள். இப்படிப்பு மருத்துவமனை இயக்கம் தொடர்பானது.
அதேசமயம், ஹாஸ்பிடல் மேலாண்மை படிப்பானது, நிதி, இயக்கம், பணியமர்த்தல் உள்ளிட்ட மருத்துவமனை மேலாண்மை தொடர்பான பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. இது ஒரு எம்.பி.ஏ., படிப்பை போன்றது. அனைத்து பிரிவு பட்டதாரிகளும் இதில் சேரலாம்.
* எம்பிஎச் படிப்பின் அவசியம்:
மருத்துவ சேவை அமைப்புகள் பலவிதமான மாற்றங்களுக்கு உட்பட்டு வருகின்றன. சுகாதார மேம்பாடு மற்றும் நோய் தடுப்பு உள்ளிட்ட அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, மருத்துவ செலவை குறைத்து ஆரோக்கிய வாழ்வில் கவனம் செலுத்தப்படுகிறது.
இத்துறை நிபுணர்களின் தேவை இன்று மிகவும் அதிகளவில் உள்ளது மற்றும் இதனால் பப்ளிக் ஹெல்த் படிப்புகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. மாஸ்டர்ஸ் இன் பப்ளிக் ஹெல்த் பட்டதாரிகள் பல்வேறு அரசு நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள்.
* பாடத்திட்டம்:
இப்படிப்பின் முதல் வருடத்தில் மாணவர்கள் எம்.பி.ஏ தொடர்புடைய அம்சங்களை படிக்கிறார்கள். ஆனால், இரண்டாமாண்டில், ஸ்பெஷலைசேஷன் நிலைக்கு வருகிறார்கள். மருத்துவம், துணை மருத்துவம் மற்றும் பாராமெடிக்கல் பிரிவுகளில் இருந்து வருபவர்களுக்கு கூடுதல் பலன்கள் உண்டு. ஏனெனில், இப்படிப்பு பப்ளிக் ஹெல்த் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் தொடர்பானதாகும்.
* பணி வாய்ப்புகள்:
இப்படிப்பு பலவிதமான பணிவாய்ப்புகளை வழங்குகிறது. அரசு துறைகள், அரசு சாரா துறைகள், என்.ஜி.ஓக்கள், திட்ட கமிஷன், சுகாதார மற்றும் குடிநீர் துறை, டபிள்யூஎச்ஓ, யுனிசெப், யுஎன்பிஏ, யுஎன்டிபி, தனியார் மருத்துவமனைகள் மற்றும் பார்மசூடிகல் நிறுவனங்கள் ஆகிய பல்வேறு அமைப்புகளில் திட்ட ஒருங்கிணைப்பாளர், அனலிஸ்ட், கன்சல்டன்ட், ஆராய்ச்சியாளர்கள், முன்னறிவிப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணிக்கு சேரலாம்.
* படிப்பின் அம்சங்கள்:
எவால்யூசன் ஆப் பப்ளிக் ஹெல்த், எபிடெமியாலஜி, ஹெல்த் எகனாமிக்ஸ், பிரிவென்சன் ஆப் டிசீஸ் மற்றும் டிசபிலீட்டிஸ், ஹெல்த் எஜுகேஷன் அன்ட் அவேர்னஸ், உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாகும்.
கழிவறைகள் இல்லாத பள்ளிகளுக்கு ஆடுத்த கல்வி ஆண்டு முதல் தகுதி சான்றிதழ் வழங்கப்படாது என்று கேரளா அரசு அறிவித்துள்ளது.
கழிவறைகள் இல்லாத பள்ளிகளுக்கு ஆடுத்த கல்வி ஆண்டு முதல் தகுதி சான்றிதழ் வழங்கப்படாது என்று கேரளா அரசு அறிவித்துள்ளது.
கேரளா மாநில அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் அம்மாநில முதல்-மந்திரி உம்மன் சாண்டி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசுகையில், பள்ளிகளில் கட்டாய கழிப்பறை வசதியை செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பள்ளியின் கட்டங்களின் பாதுகாப்பை அறிந்து இதுவரையில் பள்ளிகளுக்கு சான்றிதழ் அளிக்கப்படுகிறது. ஆனால், அடுத்த கல்வி ஆண்டு முதல் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படும். கழிவறை வசதியும் அதில் கட்டாயமாக்கப்படும். இத்தகையை வசதிகள் இல்லாத பள்ளிகளில் அடுத்து கல்வி ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்படாது. இதுவரையில் 196 அரசு பள்ளிகளில் கழிவறைகள் இல்லை. அடுத்த 100 நாட்களில் அத்தகைய வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
இதேபோல் மாநிலத்தில் 1011 அரசு உதவிபெறும் பள்ளிகளில் கழிவறை வசதி இல்லை. அடுத்த கல்வி ஆண்டுக்குள் அரசு உதவிபெறும் பள்ளிகளும் கழிவறை வசதிகளை சொந்த செலவில் செய்ய பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. என்றார்.
8 என்ற எண்ணை 8 முறை பயண்படுத்தி 1000 கொண்டுவரவும். + , - , / போன்ற எல்லா வித கணித குறிகளையும் பயண்படுத்தலாம்
1). 888 + 88 + 8 + 8 + 8 =1000
2). (8(8(8+8)-(8+8)/8))-8 =1000
3). (888-8) + 8×(8+8) - 8=1000
4). ((8×(8+8))-((8+8+8)/8))*8=1000
5). (8+((8+8)/8))^((8+8+8)/8)=1000
2). (8(8(8+8)-(8+8)/8))-8 =1000
3). (888-8) + 8×(8+8) - 8=1000
4). ((8×(8+8))-((8+8+8)/8))*8=1000
5). (8+((8+8)/8))^((8+8+8)/8)=1000
தமிழகத்தில் நடக்கும் ஆசிரியர் தின விழா பெயரில், எவ்வித மாற்றமும் கிடையாது; வழக்கம்போல் இந்த ஆண்டும், ஆசிரியர் தின விழா, வரும் 5ம் தேதி சிறப்பாக கொண்டாடப்படும் என கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.
தமிழகத்தில் நடக்கும் ஆசிரியர் தின விழா பெயரில், எவ்வித மாற்றமும் கிடையாது; வழக்கம்போல் இந்த ஆண்டும், ஆசிரியர் தின விழா, வரும் 5ம் தேதி சிறப்பாக கொண்டாடப்படும் என கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.
முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்., 5ம் தேதி, தேசிய அளவில், ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. சிறப்பாக பணிபுரியும் ஆசிரியருக்கு, மத்திய, மாநில அரசுகள், விருதுகளை வழங்குகின்றன.
இந்நிலையில், ஆசிரியர் தின விழா பெயரை, சமீபத்தில் குரு உத்சவ் என மாற்றி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. மாநில அரசுகளும், புதிய பெயரில் விழாவை கொண்டாட வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
வரும் 5ம் தேதி மாநில அரசுகளும், மத்திய அரசும், சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்க உள்ளது. தமிழகத்திலும், விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், பெயர் மாற்றம் தமிழகத்தில் அமலுக்கு வருமா? என்பது குறித்து, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்ததாவது: பெயர் மாற்றம் குறித்து, தமிழக அரசு, கல்வித் துறைக்கு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. எனவே, வழக்கம்போல் தான், விழா நடக்கும்.
வரும் 5ம் தேதி சென்னை, சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் விழாவில், 377 ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட உள்ளது. பள்ளிகல்வி அமைச்சர் வீரமணி, விருதுகளை வழங்குகிறார். இவ்வாறு கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2,000 உதவி பேராசிரியரை நியமனம் செய்வதற்கான பட்டியல், மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தெரிவித்தது.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2,000 உதவி பேராசிரியரை நியமனம் செய்வதற்கான பட்டியல், மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தெரிவித்தது.
முதலில், 1,060 உதவி பேராசிரியரை நியமனம் செய்வதற்கான பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் செய்தது. இதற்கு 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். தகுதியானவர்களுக்கு, சமீபத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, அதன்பின், நேர்முகத் தேர்வையும் நடத்தியது.
இந்நிலையில், மொத்த காலி பணி இடங்கள் எண்ணிக்கை 2,000 ஆக உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, டி.ஆர்.பி., அதிகாரி ஒருவர் கூறுகையில், "2,000 உதவி பேராசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் பட்டியல், மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும்" என தெரிவித்தார்.
மறுநிர்மாணம் செய்யப்பட்ட உலகப் புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம், செப்டம்பர் 1ம் தேதி தனது முதல் வகுப்பறை செயல்பாட்டைத் துவக்கியது.
மறுநிர்மாணம் செய்யப்பட்ட உலகப் புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம், செப்டம்பர் 1ம் தேதி தனது முதல் வகுப்பறை செயல்பாட்டைத் துவக்கியது.
தற்போதைக்கு, ஸ்கூல் ஆப் எகாலஜி அன்ட் என்விரன்மென்டல் ஸ்டடீஸ் மற்றும் ஸ்கூல் ஆப் ஹிஸ்டாரிகல் ஸ்டடீஸ் ஆகிய துறைகளில், சாதாரண முறையில் வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன.
மேலும், இப்போது, பல்கலை வளாகத்தில் 15 மாணவர்களும், 11 ஆசிரியர்களும் உள்ளனர் என்று நாளந்தா பல்கலை துணைவேந்தர் கோபா சபர்வால் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: தொடக்கத்தில் சாதாரண முறையில் வகுப்புகள் துவக்கப்படுவதற்கு காரணம், ஆசிரியர்களும், மாணவர்களும் புதிய சூழலில் பழகிக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். இப்பல்கலைக்கு, மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வரும் செப்டம்பர் 14ம் தேதி வருகைத்தர உள்ளார்.
அப்போது பெரியளவிலான நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் பல்கலையில் அனைத்து அம்சங்களும் ஒழுங்குபட்டிருக்கும் மற்றும் மீடியா கவனமும் எங்கள் மீது அதிகரித்திருக்கும்.
ஆகஸ்ட் 31ம் தேதி, மாணவர்களின் 3 நாள் ஓரியன்டேஷன் நிகழ்ச்சியை பல்கலைக்கழகம் நிறைவு செய்தது. உலகின் 40 நாடுகளிலிருந்து 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்வேறு பாடப்பிரிவுகளில், சேர்க்கைக்காக இப்பல்கலைக்கு விண்ணப்பித்தனர். ஆனால், அவர்களில், 15 பேர் மட்டுமே (ஜப்பான் மற்றும் பூடானிலிருந்து தலா ஒருவர்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இப்பல்கலை வளாகம் அமைந்த ராஜ்கிர் என்ற இடம், பீகாரில் அமைந்துள்ள புத்தகயா என்ற பெளத்த புனித ஸ்தலத்திற்கு அடுத்து, இரண்டாவது பெளத்த மத முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இப்பல்கலைக்கு, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகள் பல்வேறான நிதியுதவியை அளித்துள்ளன மற்றும் அளிக்கவுள்ளன.
இதோடு சேர்த்து, இந்திய அரசாங்கம், 10 ஆண்டு காலகட்டத்திற்கு, ரூ.2,700 கோடியை ஒதுக்கியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
தமிழகத்தில் 17 அரசு நர்சிங் கல்லுாரிகளில், முதல்வர் பணியிடங்கள் ஓராண்டுக்கும் மேலாக நிரப்பப்படாததால், செயல்பாடுகளில் தள்ளாட்டம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 17 அரசு நர்சிங் கல்லுாரிகளில், முதல்வர் பணியிடங்கள் ஓராண்டுக்கும் மேலாக நிரப்பப்படாததால், செயல்பாடுகளில் தள்ளாட்டம் ஏற்பட்டுள்ளது. அரசு, இதில் கவனம் செலுத்தவில்லையே என மாணவர்கள் புலம்புகின்றனர்.
தமிழகத்தில் 23 அரசு நர்சிங் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஆண்டுதோறும் 3,000 பேர் படிக்கின்றனர். 23 கல்லுாரிகளில், தற்போது ஆறு கல்லுாரிகளில் மட்டுமே முதல்வர்கள் உள்ளனர். மீதமுள்ள 17 கல்லுாரிகளில், முதல்வர் பணியிடங்கள் ஓராண்டுக்கும் மேலாக காலியாக உள்ளன.
இதனால், தேவையானவற்றை தீர்மானித்தல், முக்கிய முடிவுகளை எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. பெரும்பாலான கல்லுாரிகளில், நிர்வாகப் பணிகளை துணை முதல்வர், மூத்த ஆசிரியர்கள் செய்வதால், அவர்களின் வழக்கமான பணிகள், கல்வி போதிக்கும் பணிகளும் பாதிக்கும் சூழல் உள்ளது.
அரசு ஏனோ, இந்த கல்லுாரிகள் மீது போதிய கவனம் செலுத்தவில்லை. டிப்ளமோ நர்சிங் கலந்தாய்வு, அடுத்த வாரம் துவங்குகிறது. விரைவில், முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கும் நிலையில், இனியாவது காலியாக உள்ள முதல்வர் இடங்களை நிரப்ப வேண்டும் என நர்சிங் மாணவர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
சுகாதாரத் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "முதல்வர் இல்லாத நர்சிங் கல்லுாரிகளை, துணை முதல்வர்கள் கண்காணித்து வருகின்றனர். காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்ப, தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரித்து, அரசுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது" என்றார்.
புதியதாக நியமிக்கப்படும் தொடக்க கல்வி ஆசிரியர்கள், வரும் செப்., 8 ம் தேதி பணியில் சேர, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
புதியதாக நியமிக்கப்படும் தொடக்க கல்வி ஆசிரியர்கள், வரும் செப்., 8 ம் தேதி பணியில் சேர, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
தொடக்கக் கல்வித்துறையில் 1,649 இடைநிலை ஆசிரியர், 167 அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான
கலந்தாய்வு செப்., 1 முதல் செப்., 4 வரை நடக்கிறது.
கலந்தாய்வில் பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் நேரடி மேற்பார்வையில் கலந்தாய்வு நடத்த வேண்டும். கலந்தாய்வு முடியும் வரை, மாவட்ட தலைமையை விட்டு அவர்கள் வெளியிடங்களுக்கு செல்லக்கூடாது. கலந்தாய்வுக்கு வருபவர்களிடம், கனிவான அணுகுமுறையை கையாள வேண்டும். ஆசிரியர்கள், கலந்தாய்வில் தங்களுக்கு விருப்பமான இடத்தை தேர்வு செய்தவுடன், ஒதுக்கீட்டு ஆணையை உடனே பிரின்ட் எடுத்து கொடுக்க வேண்டும்.
கலந்தாய்வு நடக்கும்போது, மாவட்டத்தில் காலி பணியிடங்கள் இல்லாத பட்சத்தில், அதை காத்திருப்பவர்களுக்கு அறிவிப்பு பலகை மூலம் தெரியப்படுத்த வேண்டும். பணியிட ஒதுக்கீடு பெற்றவர்கள், ஒதுக்கீட்டு ஆணையில் குறிப்பிட்டுள்ள, ஆவணங்களுடன் செப்.,4 முதல் 6 ம் தேதிக்குள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடம் பணி நியமன ஆணை பெற்று, செப்.,8 ல் பணியில் சேர்ந்திட தொடக்கக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.
பணி நியமன ஆணை வழங்கும் முன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்கள் அடங்கிய குழுக்கள் சான்றிதழ்களை முறையாக சரிபார்க்க வேண்டும். பின்னாளில் ஏதேனும் குறை நிகழ்ந்தால், சம்பந்தப்பட்ட குழு உறுப்பினர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருமே பொறுப்பு ஏற்க நேரிடும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று(செப்டம்பர் 1) துவங்குகின்றன.
அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று(செப்டம்பர் 1) துவங்குகின்றன. எதிர்கால கனவுகளோடு, மாணவர்கள் கல்லுாரிகளில் அடியெடுத்து வைக்கின்றனர். தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லுாரிகளும், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லுாரியும் உள்ளன.
கலந்தாய்வு: இதில், 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 100 பி.டி.எஸ்., (பல் மருத்துவம்) இடங்களும் உள்ளன. இந்த ஆண்டுக்கான, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, இரண்டு கட்ட கலந்தாய்வுகளில் முடிந்தன. அனைத்து இடங்களும் நிரம்பின.
இடஒதுக்கீடு பெற்ற மாணவ, மாணவியர் கல்லுாரிகளில் மருத்துவக் கல்வி இயக்கக வழிகாட்டுதல்படி சேர்ந்தாலும், அரசு அறிவிப்பின்படி, முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., வகுப்புகள், முறைப்படி இன்று துவங்குகின்றன. கட் - ஆப் மதிப்பெண் அடிப்படையில், இடஒதுக்கீடு பெற்ற மாணவ, மாணவியர், சிறந்த டாக்டர்களாகும் எதிர்கால கனவுகளோடு, இன்று கல்லுாரி வகுப்புகளில் அடி எடுத்து வைக்கின்றனர். அவர்களை, மூத்த மாணவர்களும் வரவேற்று, உற்சாகப்படுத்த தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி இயக்ககம், சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
மாணவ, மாணவியர், ஜீன்ஸ் பேன்ட், டி - சர்ட் போன்ற உடைகளை அணியக்கூடாது.
மாணவியர் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற உடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும். தலைமுடியை விரித்து விட்டபடி வராமல், இறுக்கமாக கட்டிக்கொண்டு வகுப்புக்கு வரவேண்டும்.
மாணவர்கள் பேன்ட், முழுக்கை சட்டை அணிந்து, இன் செய்து கொண்டும், ஷூ அணிந்தும் வர வேண்டும். ஜீன்ஸ், டி - சர்ட் அணிந்து வருவோருக்கு வகுப்புகளில் அனுமதி இல்லை.
டாக்டருக்கு படிக்க வருவோர், கண்ணியமான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்பதால், இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
எச்சரிக்கை: இதுதவிர, ராகிங் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. ராகிங் புகாரில் சிக்கினால், கல்லுாரியை விட்டு நீக்கப்படுவர் எனவும், எச்சரிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை சிக்கலின்றி முடிந்தது. சுயநிதி கல்லுாரிகளில், ஐந்து கல்லுாரிகளில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி மறுத்ததால், 700 எம்.பி.பி.எஸ்., இடங்கள் வரை குறைந்தது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)